இன்று பிறை தெரியவில்லை.. தமிழகத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான்.. அரசு தலைமை காஜி அறிவிப்பு
சென்னை: தமிழகம், புதுவையில் ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இன்று பிறை தெரியாததால் தமிழகம், புதுவையில் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் மாதம். இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக நோன்பு இருத்தல் கருதப்படுகிறது. இந்த ரமலான் மாதம் பசி, உணவு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டு தொழுகை, ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உள்ளது.
பகலில் உணவு, தண்ணீர் ஏதும் இன்றி மாலையில் இப்தார் உணவுடன் நோன்பை துறப்பது வழக்கம். சூரியன் மறையும் வரை இவர்கள் நோன்பை கடைப்பிடிப்பார்கள். நோன்புக்கு முன்பு சஹர் என்ற உணவும், நோன்பிற்கு பிறகு அதாவது முடிக்கும் நேரத்தில் இப்தார் என்றும் அந்த உணவு அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் மார்ச் 12 ஆம் தேதிதான் பிறை தெரிந்தது. இதனால்தான் ரமலான் மாதம் அன்று தொடங்கப்பட்டது.
சுமார் 30 நாட்கள் விரதமிருந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில் இன்று பிறை தெரிந்தால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகம், புதுவையில் இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications