குடும்ப அட்டைதாரர்களுக்கு இது முக்கியம்.. ரேஷன் அட்டை தனியா வேணுமா? ரேஷன் கார்டில் இப்படி செய்யுங்க
சென்னை: ரேஷன் அட்டையில், புதிதாக ஒரு நபரை இணைக்க வேண்டும் என்றால், அதற்கு ஆன்லைனில் வசதி உள்ளதா? புதுமண தம்பதிகளுக்கு தனி ரேஷன்கார்டு தேவையென்றால், அதறகு என்ன செய்ய வேண்டும்? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
ரேஷன் கார்டுகள் என்பவை முக்கியமான ஆவணமாகிவிட்டது.. யாராலும் தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது.. எனவே, பத்திரமாக ரேஷன் கார்டுகளை வைத்திருக்க வேண்டும்..

ஒருவேளை உங்களது ரேஷன் கார்டுகளில் திருத்தம் இருந்தாலோ அல்லது புதிதாக பெயர் சேர்க்க வேண்டும் என்றாலோ அல்லது யாருடைய பெயரையாவது நீக்க வேண்டும் என்றாலோ, அனைத்தையுமே ஆன்லைனில் எளிதாக செய்து கொள்ளும் வசதியை அரசு செய்து தந்துள்ளது.
தனி ரேஷன் கார்டு தேவையா
உதாரணத்துக்கு புதிதாக திருமணமாகி, ஒருவர் குடும்பத்தில் கூடுதலாக இணைகிறார் என்றால், அவரது பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டிவரும். அல்லது தனி அட்டையாக கணவன், மனைவி இருவரும் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஒருவேளை உங்களுக்கு தனி ரேஷன் கார்டு வேண்டும் என்றால், ஏற்கனவே உள்ள வீட்டின் ரேஷன் அட்டையிலிருந்து உங்கள் பெயரை நீக்க வேண்டும். அந்த பெயரை நீக்கினால் மட்டுமே புதிய ரேஷன் அட்டையில் உங்கள் பெயரை சேர்க்க முடியும். இதற்கும் ஆன்லைனிலேயே வசதி உள்ளது.
https://tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில், பெயர் மாற்றம், திருத்தம், பெயர் இணைப்பு, பெயர் நீக்கம் என அனைத்து வசதிகளையும் பெற முடியும். அந்தவகையில், புதிதாக திருமணமானவர்களும் பெயர்களை நீக்கலாம் / சேர்க்கலாம்.
அதேபோல தனியாக ரேஷன் கார்டு வேண்டுமானால், புதுமண தம்பதியின் ஆதார் அட்டையும், கேஸ் சிலிண்டர் பில்லும் தேவைப்படும். காரணம், இவைகள் தம்பதிகளின் முகவரி சான்றுக்கு ஆதாரமாகவும், ஆவணமாகவும் எடுத்து கொள்ளப்படும். இருப்பிட சான்றிதழ் தேவைப்படும் என்பதால், வீட்டு வாடகை பத்திரமும் தேவைப்படும். இத்தனை ஆவணங்களையும் வைத்து விண்ணப்பித்தால்தான், தனி ரேஷன் கார்டுகளை புதிதாக தம்பதி பெற முடியும்.
ஆன்லைனில் ரேஷன் கார்டில் புதிதாக உறுப்பினரை சேர்க்க விண்ணப்பிப்பது எப்படி
- ரேஷன் கார்டிலிருந்து பெயர் சேர்க்க https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குள் நுழைந்து, "மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- " உறுப்பினரை சேர்க்க" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, ரேஷன் கார்டில் தரப்பட்டிருக்கும் செல்போன் நம்பர், கேப்ட்சா குறியீடு போன்றவற்றை உள்ளிட வேண்டும்.
- இப்போது உங்களது செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரை டைப் செய்தால், இன்னொரு பக்கம் தோன்றும்.. அதில், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் காணப்படும்.
- அதில், "குடும்ப உறுப்பினர் சேர்க்கை" என்பதை கிளிக் செய்து, உங்களது பெயர், பாலினம், பிறந்த தேதி, உறவு முறை போன்ற விவரங்களை பதிவிட்டு உறுதிப்படுத்துதல் வேண்டும்.
புதிய ரேஷன் கார்டுகள்
இதனிடையே, புதிய ரேஷன் கார்டுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது.. உயிரிழந்தவரின் பெயரை ரேஷன் கார்டிலிருந்து நீக்க வேண்டுமானால், இறப்பு சான்றிதழ் தேவைப்படும். அதேபோல, புதிதாக திருமணமானவரின் பெயரை ரேஷன் அட்டையிலிருந்து நீக்க வேண்டுமானால், அதற்கு திருமண சான்றிதழ் தேவைப்படும். இந்த விதியைதான் தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. எனவேதான், ரேஷன் கார்டு பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
எனினும், ரேஷன் கார்டு சரிபார்ப்பு விஷயத்தில் உள்ள கடுமையான விதிமுறைகளை அரசு தளர்த்த வேண்டும் என்றும், விரைந்து ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications