பாமாயில் வாங்கிட்டீங்களா? ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக்! நியாய விலை கடைகள் இயங்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருட்களை பாக்கெட்டில் வழங்குவது, ஊழியர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 24 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தமிழக அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கல்வித் தொகுதியின் அடிப்படையில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

tamil nadu ration shop

அந்த வகையில் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சட்டம் ஒழுங்கிற்கு பிரச்சினை வராத வண்ணம் ரேஷன் கடை பணியிலும் பாதிப்பு ஏற்படாமலும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்போருக்கு சம்பளம் பிடித்தம் செய்யவும் சங்கத்தின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 34,790 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 33,377 கடைகள் கூட்டுறவு துறையால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்டவை 2 கோடி ரேஷன் தாரர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இவை இலவசமாகவும் குறைந்த விலையிலும் வழங்கப்படுகிறது. ரேஷன் பொருட்களை யாராவது ஏமாற்றி பெறுவதை தவிர்க்க ஆதாருடன் இணைக்கப்பட்ட ரேஷன் கார்டு இவருடையதுதானா என்பதை அறிய பிஓஎஸ் மெஷினில் கைரேகை வைக்கப்படுகிறது.

ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வரும் போது அந்த கிடங்குகளில் இருக்கும் எடை மெஷினும் கம்ப்யூட்டரும் ப்ளூடூத் மூலம் இணைக்காமல் குறைந்த எடையிலேயே கடைகளுக்கு பொருட்கள் வருகின்றன. இவ்வாறு வரும் நிலையில் அந்த ரேஷன் கடைக்குள்பட்ட எல்லா மக்களுக்கும் எப்படி ரேஷன் பொருட்களை முழுமையாக கொடுக்க முடியும். எனவே சரியான எடையில் உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+