தனிமையில் பிரியா.. நடுவீட்டில் வந்து உட்கார்ந்த "ஆபீசர்".. ஒரே அலறல்.. வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு
சென்னை: பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் காடு வழங்கல் அதிகாரியை, விரட்டி விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர் பொதுமக்கள்..!
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் உள்ள வாசர் வரதப்ப மேஸ்திரி தெருவில் வசித்து வருபவர் பிரியா.. இவர் கணவனை இழந்தவர்.. ஆதரவு என்று யாருமே இவருக்கு இல்லை.
அதனால், தனியாக ஒரு விட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.. இப்போது புதிய ரேஷன் கார்டு ஒன்றை ஆன்லைன் மூலமாக பதிவு செய்துள்ளார்

தொல்லை
புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள தண்டையார்பேட்டை மண்டல உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் அயாத் பாட்சா.. இவர் இளநிலை உதவியாளராக பணிபுரிகிறார்.. இவர் பிரியாவின் வீட்டிற்கு சோதனைக்காக நேற்று வந்துள்ளார்.. அப்போது புது ரேஷன் கார்டுக்காக பதிவு செய்த ஆவணங்கள் சரியாக இல்லை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆபாசம்
பிறகு, மறுபடியும் நைட் நேரம் பிரியாவுக்கு போன் செய்துள்ளார்.. ரேஷன் டாக்குமண்ட் குறித்து பேச்சை எடுத்த அதிகாரி, கொஞ்ச நேரத்தில் தன் பேச்சை வேறுவிதமாக திசை திருப்பினார்.. உடனே சுதாரித்துகொண்ட பிரியா, அதிகாரியின் பேச்சு சரியில்லை என்பதை உணர்ந்து, போனைகட் செய்துவிட்டார். ஆனால், இன்று காலையில், பிரியா வீட்டிற்கு அந்த நேரடியாகவே சென்று விட்டார்.

நடுவீட்டில் அமர்க்களம்
வீட்டில் யாருமே இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அதிகாரி, நடுவீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு, ஆபாசமாக பேச ஆரம்பித்துள்ளார்.. பின்னர் பிரியாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.. இதனால் அதிர்ந்து போன பிரியா, கத்தி கூச்சலிட்டுள்ளார்.. அந்த சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பிரியா வீட்டிற்கு ஓடிவந்தனர்.. நடந்த சம்பவத்தை அறிந்து, ரேஷன் கடை அரசு அதிகாரியை, உடனடியாக பிடித்து புதுவண்ணாரப்பேட்டை ஸ்டேஷனில் கொண்டுபோய் ஒப்படைத்தனர்

வன்கொடுமை
இதுகுறித்து பிரியா சொல்லும்போது, கணவனை இழந்த பெண்களுக்கு நேரிடும் இதுபோன்ற வன்கொடுமைகள் மீண்டும் யாருக்கும் வரக்கூடாது.. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறேன்.. சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.. இந்த சம்பவம் வண்ணாரப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications