ரேஷன் கடைக்கு போக வேண்டாம்.. குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே.. ஸ்டாலின் திட்டம் எப்போது?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடக்க இயலாத முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரேஷன் பொருட்கள் வாங்க கடைக்கு செல்ல சிரமப்படுவதை தவிர்க்க அவர்களின் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கும் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இந்த சோதனை திட்டம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த சோதனை திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படும்.. முழுமையாக திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது பற்றி பார்ப்போம்.
தமிழ்நாட்டில் வீடு தேடி வந்து ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. அந்த கோரிக்கைக்கு அரசுகள் இதுவரை செவி சாய்க்காமல் இருந்து வந்தன. இந்நிலையில் படிப்படியாக இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் எல்லாருக்கும் நடைமுறைப்படுத்தப்படுமா என்றால், அதுபற்றி அரசு முறைப்படி அறிவித்தால் தான் தெரியவரும்.

அதேநேரம் தமிழகத்தில், நடக்க இயலாத முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரேஷன் பொருட்கள் வாங்க கடைக்கு செல்ல சிரமப்படுகிறார்கள். அவர்களின் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
இதன்படி சென்னை, நெல்லை, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தருமபுரி, நாகை, நீலகிரி, கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு 10 ரேஷன் கடைகள் வீதம் 100 ரேஷன் கடைகளில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை சோதனை முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, ரேஷன் பொருட்கள் வேனில் கொண்டு செல்லப்பட்டு 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடு தேடி சென்று அவர்களின் கைவிரல் ரேகைப்பதிவு பெறப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டிருந்தது. அப்போது, ஒரு கடைக்கு சராசரியாக 70 வீடுகளுக்கு நேரில் சென்று பொருட்களை வழங்க இலக்கு நிர்ணயித்து சோதனை முறையில் பணியாளர்கள் வினியோகம் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் சராசரியாக 50 வீடுகளுக்கு மட்டுமே வினியோகம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா 10 கடைகள் தேர்வு செய்யப்பட்டு வருகிற ஆகஸ்டு 8-ந் தேதி வயது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
அதைத் தொடர்ந்து ஆகஸ்டு 15-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே வரும் செப்டம்பர் முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications