ரேஷன் கடைக்கு போக வேண்டாம்.. குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே.. ஸ்டாலின் திட்டம் எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடக்க இயலாத முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரேஷன் பொருட்கள் வாங்க கடைக்கு செல்ல சிரமப்படுவதை தவிர்க்க அவர்களின் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கும் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இந்த சோதனை திட்டம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த சோதனை திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படும்.. முழுமையாக திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது பற்றி பார்ப்போம்.

தமிழ்நாட்டில் வீடு தேடி வந்து ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. அந்த கோரிக்கைக்கு அரசுகள் இதுவரை செவி சாய்க்காமல் இருந்து வந்தன. இந்நிலையில் படிப்படியாக இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் எல்லாருக்கும் நடைமுறைப்படுத்தப்படுமா என்றால், அதுபற்றி அரசு முறைப்படி அறிவித்தால் தான் தெரியவரும்.

Ration shop scheme for elderly Tamil Nadu launches pilot distribution project in all districts Aug 8

அதேநேரம் தமிழகத்தில், நடக்க இயலாத முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரேஷன் பொருட்கள் வாங்க கடைக்கு செல்ல சிரமப்படுகிறார்கள். அவர்களின் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

இதன்படி சென்னை, நெல்லை, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தருமபுரி, நாகை, நீலகிரி, கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு 10 ரேஷன் கடைகள் வீதம் 100 ரேஷன் கடைகளில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை சோதனை முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, ரேஷன் பொருட்கள் வேனில் கொண்டு செல்லப்பட்டு 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடு தேடி சென்று அவர்களின் கைவிரல் ரேகைப்பதிவு பெறப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டிருந்தது. அப்போது, ஒரு கடைக்கு சராசரியாக 70 வீடுகளுக்கு நேரில் சென்று பொருட்களை வழங்க இலக்கு நிர்ணயித்து சோதனை முறையில் பணியாளர்கள் வினியோகம் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் சராசரியாக 50 வீடுகளுக்கு மட்டுமே வினியோகம் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா 10 கடைகள் தேர்வு செய்யப்பட்டு வருகிற ஆகஸ்டு 8-ந் தேதி வயது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
அதைத் தொடர்ந்து ஆகஸ்டு 15-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே வரும் செப்டம்பர் முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+