அரிசி அட்டைதாரர்களுக்கு நிம்மதி.. ஆக்ஷனில் கூட்டுறவுத்துறை ஆபிசர்ஸ்.. ரேஷன் கடைகளுக்கு போன உத்தரவு
சென்னை: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், தமிழக ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்புகள் பறந்துள்ளன.. என்ன நடந்தது?
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க போகிறது.. எனவே, இதற்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு முழுமூச்சாக இறங்கி விட்டது. சென்னை மாநகராட்சியோ, கடந்த மாதமே இந்த அதிரடியை கையில் எடுத்துவிட்டது.

அதேபோல, தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.. இந்த அபாயத்தை போக்கவும் தமிழக அரசு தயாராகி வருகிறது.
விவசாயம்: இந்த வருடம் தென்மேற்கு பருவமழை, தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலுமே குறைந்துவிட்டது.. இந்த மழைபொழிவுதான், விவசாயத்துக்கு அடிப்படையானது.. ஆனால் மழை குறைவால், பாசனம் மட்டுமின்றி குடிநீர் தேவையை சமாளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.. இப்போதே, நிறைய மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்க துவங்கிவிட்டது.. வடகிழக்கு பருவமழை ஏமாற்றினால் நிலைமை இன்னும் மோசமாகும்.
குடிநீர் தட்டுப்பாடு: அதனால்தான், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து நகராட்சி நிர்வாகத்துறையும் முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள இப்படி நாலாபக்கமும் அரசு துறைகள் இயங்கிவரும்நிலையில், கூட்டுறவுத்துறையும் இதில் நுழைந்துள்ளது.. மழையின்போது ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் மூட்டைகள் நனைந்து, வீணாகுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, கூட்டுறவு மற்றும் உணவு துறை உத்தரவிட்டுள்ளதாம்..
காரணம், தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டிய அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பல கடைகள், வாடகை கட்டிடங்களில் செயல்பட்டும் வருகின்றன..
இடவசதி: இங்கு போதிய இட வசதி இல்லாததால், கடைக்கு வாசலிலும் தானிய மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில், வட கிழக்கு பருவ மழை சீசன் துவங்குகிறது. எனவே, மழை நீர் தேங்க வாய்ப்புள்ள தாழ்வான இடங்களில் உள்ள ரேஷன் கடைகள் என்னென்ன என்பதை கண்டறிந்து, அவற்றில் உள்ள பொருட்களை அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களில் வைக்க முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது..!!












Click it and Unblock the Notifications