Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹவுஸ் லோன், பர்சனல் லோன், பிஸ்னஸ் கடன்.. வாங்க போறீங்களா? அடியோடு மாறும் விதிகள்! ஆர்பிஐ மெகா முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை; வங்கிகள் தொடர்பான பல்வேறு முக்கியமான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த வருட தொடக்கத்தில் மாற்ற உள்ளது. இதற்காக 238 பரிந்துரைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு உள்ளது.

சமீப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்த முன்மொழிவுகளில் ஒன்றாக, ரிசர்வ் வங்கி (RBI) வரைவு 238-ஐ வெளியிட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் அமைப்புரீதியான பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய வங்கி விதிகளை உள்ளடக்கிய விரிவான தொகுப்பாகும். லோன் கொடுப்பது தொடங்கி, இஎம்ஐ விதிகள், கிரெடிட் கார்டு விதிகள், வங்கி சேமிப்பு விதிகள் என்று பல முக்கியமான விதிகள் இதனால் மாற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

repo rate

பொதுமக்கள் கருத்துகளுக்காக நவம்பர் 10 வரை திறந்திருக்கும் இந்த வரைவு, அதன்பின் அமலுக்கு கொண்டு வரப்படும்.

ஜனவரி 2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய கட்டமைப்பு, பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் முழுவதும் ஒரு சீரான தன்மையைக் கொண்டுவருவதோடு, நிதி நெறிமுறைகள், மோசடி தடுப்பு மற்றும் வாடிக்கையாளர் உரிமைகள் மீது கண்காணிப்பை நிலைநிறுத்தவும் முயல்கிறது.

வங்கிகளுக்கு ₹25,000 அபராதம்

இணையவழி மோசடி முதல் சிட் ஃபண்டுகள் வரை பல விஷயங்களை கண்காணிக்கும் வகையில் விதிகள் மாற்றப்பட உள்ளன. இந்த வரைவின் முக்கிய அம்சங்களில் ஒன்று, இணையவழி மோசடிக்கு ஆளானவர்கள் மூன்று நாட்களுக்குள் புகார் அளிப்பதற்கான காலக்கெடுவை அறிமுகப்படுத்துவதாகும்.

இந்த காலக்கெடுவுக்குள் வங்கிகளுக்குத் தகவல் தெரிவிக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும். அதேசமயம், உடனடியாக டிஜிட்டல் மோசடி வழக்குகளில் செயல்படத் தவறும் வங்கிகளுக்கு ஒரு சம்பவத்திற்கு ₹25,000 அபராதம் விதிக்கப்படலாம். இந்த விதி, இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடிகளுக்கு நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் அனுமதி இல்லாத லாட்டரிகள் மற்றும் சிட் ஃபண்டுகள் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் முடக்குமாறு ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில், இவை மோசடி மற்றும் பணமோசடி திட்டங்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆர்பிஐ லோன் விதி

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் புரிவதை எளிதாக்குவதற்கும், வங்கிகளின் செலவுகளைக் குறைப்பதற்கும் உதவும் வகையில் 22 புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. ஆர்பிஐ அறிவித்துள்ள இந்த விதிகள் வீட்டு லோன் தொடங்கி பலவற்றில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய விதிப்படி ஒரு நிறுவனத்திற்கு வங்கி அமைப்பு வழங்கும் ₹10,000 கோடி கடன் உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வங்கி சார்ந்த கட்டுப்பாடுகள் தொடரும். அதாவது ஒரு நிறுவனத்திற்கு ஒரு வங்கி ஒரே கையெழுத்தில் 10 ஆயிரம் கோடி கடன் வழங்க முடியும். வங்கிகள் வேண்டுமானாலும் இதற்கு எதிராக விதி கொண்டு வரலாம். ஆனால் இதுவரை இருந்து வந்த ஆர்பிஐ விதி இனி இருக்காது.

ஒரு வங்கியின் மொத்த கடனில், ஒரு குறிப்பிட்ட கடன் வாங்குபவருக்கு அதன் நிகர மதிப்பில் 20 சதவீதமும், ஒரு குழுமத்திற்கு 25 சதவீதமும் மட்டுமே வழங்க முடியும். கடந்த பத்தாண்டுகளில் கார்ப்பரேட் துறைகளுக்கான வங்கிக் கடன்கள் 10 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்கும் நிதி அல்லாத வங்கிகள் (NBFCs) மீதான இடர் எடைகளைக் குறைப்பதன் மூலம் உள்கட்டமைப்பு நிதி செலவைக் குறைக்கவும் மத்திய வங்கி முன்வந்துள்ளது. பங்குகள், ஆரம்பப் பொதுப் பங்குகள் (IPOs) உட்பட, முதலீடு செய்ய கடன் வாங்குபவர்களுக்கான கடன் வரம்புகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் பெரும்பாலும் ஜனவரி 2026ல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+