ஆந்திராவில் மழையால் அதிர்ஷ்டம்.. ஒரு கல் கிடைத்தாலும் கோடி.. வைர வேட்டையில் இறங்கிய கிராம மக்கள்
சென்னை: ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமாவில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லூர் வைர சுரங்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டு விட்டது. இந்நிலையில் வைரக் கண்டுபிடிப்புகளுக்கு நீண்ட காலமாகப் பெயர் பெற்ற ஜோனகிரி, துக்கலி மற்றும் பெரவலி மண்டலங்களில் உள்ள கிராம மக்கள் வைர வேட்டையில் இறங்கி உள்ளனர். ஆந்திராவில் ராயலசீமா பகுதியில் பருவமழை பெய்துள்ளதால் வைர வேட்டைக்கு மக்கள் தயாராகி உள்ளனர். பலரை லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாற்றி உள்ளதால் தேடுவது அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் ஒவ்வொரு முறை மழை காலம் ஆரம்பிக்கும் போது கர்னூல், அனந்தபூர் மாவட்டங்களில் மக்கள் வைர வேட்டையில் இறங்குவார்கள். இதன்பின்னணி பற்றி பார்ப்போம். ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமா என்று அழைக்கப்படும் கர்னூல், அனந்தபூர் மாவட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லூர் வைர சுரங்கம் ஒரு காலத்தில் இருந்தது. இந்த சுரங்கம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டுவிட்டது. ஆனாலும் பொதுமக்களின் கைகளில் அதிர்ஷ்டவசமாக வைரங்கள் சிக்குவது தொடர்கதையாக இருக்கிறது தங்கம் எப்படி மக்களை கோடீஸ்வரன் ஆக்குகிறததோ, அதுபோல் வைரமும் மக்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தருகிறது.

கர்னூல் அனந்தபூர்
எனவே கர்னூல் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், மழைக்காலத்தில் பயிர் விவசாயத்துக்குப் பதிலாக, "வைர வேட்டை"யில் ஈடுபடுவது நடக்கிறது.. அதற்காக மழைக்காலம் தொடங்கிவிட்டால் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களும் ராயலசீமா பகுதியின் சுற்றுவட்டார கிராமங்களுக்கு படையெடுத்து வைரங்களை தேட தொடங்குவது ஆரம்பிக்கிறது.
ராயலசீமா
ராயலசீமாவில் தற்போது பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் கிராமவாசிகளுக்கு இந்த மழைப்பருவம், வைரங்களைத் தேடும் அதிர்ஷ்ட பருவமாக மாறியிருக்கிறது. வைரக் கண்டுபிடிப்புகளுக்கு புகழ் பெற்ற ஜோனகிரி, துக்கலி மற்றும் பெரவலி மண்டலங்களில் மழை நீரால் கழுவப்பட்ட நிலங்களில் வைரக் கற்கள், தங்கள் கண்களில் சிக்குமா என்று தீவிரமாக தேடி வருகிறார்கள். கிடைக்கும் வைரங்களை போட்டி போட்டு வாங்க வைர வியாபாரிகளும் இங்கு அதிக அளவில் இருக்கிறார்கள்.
அதிர்ஷ்டம் கிடைக்கும்
நீங்கள் ஒரு கல்லைத் கண்டெடுத்தாலும், அது உங்கள் அதிர்ஷ்டத்தை தரும் என்கிறார்கள் உள்ளூர் மக்கள். விலைமதிப்பற்ற கற்களை தேடி வந்த பலருக்கும் வாழ்க்கையே மாறி உள்ளது. பலோ என்பவர் தான் முதல் வைரத்தை 2018-ல் கண்டுபிடித்துள்ளார். இந்த ஆண்டு ஒரு கல்லை மட்டும் ரூ.8 லட்சத்திற்கு விற்றுள்ளாராம். இப்படி பலரும் வைர வேட்டையில் இறங்கி உள்ளார். சமூக சேவகியான தீபிகா என்பவர் முன்பு ஒரு வைரத்தை ரூ.5 லட்சத்திற்கு விற்றதாகவும் கூறியிருக்கிறார். இவர்கள் மட்டுமல்ல பலரையும் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் கர்னூல் வைரம் மாற்றி உள்ளது. அதனால் நம்பிக்கையுடன் தேடுவதை பலரும் தொடருகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications