மறைமலைநகரில் வெடிகுண்டு வீசி ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
செங்கல்பட்டு: மறைமலைநகர் முருகன் கோயிலில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரை மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்தது. அப்போது பாதுகாப்புக்கு வந்த காவலர் சுட்டதில் மர்ம நபர்களில் ஒருவர் பலியாகிவிட்டார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
Recommended Video

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் திருமாறன். அதிமுக பிரமுகரான இவர் மேன்பவர் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
தொழிலதிபரான இவர் தனது திருமணநாளான இன்று மறைமலைநகர் ஶ்ரீ செல்வமுத்து குமரசுவாமி முருகன் கோயிலுக்கு சாமி கும்பிட தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் வந்துள்ளார்.

துப்பாக்கி ஏந்திய காவலர்
இவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் கூடவே இருக்க அனுமதி உண்டு. அப்படி இருந்தும் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் இருக்கும் போதே நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் திருமாறனை அரிவாளால் சரமாரியாக வெட்டி அவர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்துள்ளனர்.

சிகிச்சை
தப்பிக்க சென்ற மர்ம கும்பலை நோக்கி திருமாறனின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டதில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (19) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஒருவர் ஆபத்தான சூழ்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கடை அடைப்பு
மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் மறைமலைநகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு அப்பகுதியே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

உறவினர்கள்
சடலத்தை மீட்க விடமாமல் திருமாறனின் உறவினர்கள் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கூடி போலீசாரை பணி செய்மவிடாமல் இடையூறு செய்ததால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி மற்றும் முருகன் ஆலயத்தில் இச்சம்பவம் நடந்தேறியதால் அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications