சிவப்பும்..காவியும்.. வரவேற்பு பதாகைகளில் பளிச்சிடும் கட்சிகொடி வண்ணம்
Recommended Video
சென்னை: சீன அதிபர் ஷி ஜின்பிங் நாளை சென்னை வரவுள்ள நிலையில் அவரை வரவேற்பதற்காக வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் காவி நிறமும், சிவப்பு நிறமும் பளிச்சிடுகின்றன.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி வண்ணத்தை குறிக்கும் சிவப்பும், பாஜக கொடி வண்ணத்தை குறிக்கும் காவியும் வரவேற்பு பதாகைகளின் பேக்கிரவுன்ட் நிறங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியா தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது. தமிழ், இந்தி, சைனீஷ் ஆகிய மூன்று மொழிகளில் பேனர்களில் எழுதப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை வைக்கப்பட்டுள்ள பேனர்களில் பெரும்பாலனவைகளில் ஆங்கிலம் முடிந்தவரை தவிர்க்கப்பட்டு, இந்தி, சைனீஸ், தமிழ் மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. சீன மொழியில் வரவேற்பு அளித்து ஷி ஜின்பிங்கின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக அரசு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்துள்ளன.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விவகாரம் என்னவென்றால், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கொடியும், பாஜக கொடியும் ஒன்றாக சேர்ந்து பறப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று. கம்யூனிஸ கொள்கைகள் வேறு, பாஜக கொள்கைகள் வேறு; இந்நிலையில், ஷி ஜின்பிங்கின் இந்திய வருகை அந்த வேறுபாடுகளை எல்லாம் களைந்துள்ளது.
இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு மூன்று நாள் பயணமாக சீனா சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் உற்சாக வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது. சீனா தனக்கு அளித்த வரவேற்பை விஞ்சும் வகையில் இந்தமுறை ஜின்பிங்குக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications