Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புவனகிரியில் குவிகிறது கவனம்.. ஒரே ஒரு வார்டில் இன்று மறுவாக்குப்பதிவு.. இன்றே வெளியாகிறது ரிசல்ட்

புவனிகிரியின் ஒரே ஒரு வார்டில் மட்டும் இன்று மறுவாக்குபதிவு நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: புவனகிரி பேரூராட்சியில் ஒரு வார்டில் மறுவாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. .இந்த ஒரு வார்டில் மட்டும் இயந்திர கோளாறு காரணமாக மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது.

1,374 மாநகராட்சி உறுப்பினர், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, அதில் பதிவான வாக்குகளும் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.

 அபார வெற்றி

அபார வெற்றி

இதில் திமுக பெரும்பாலான இடங்களில் வென்றதுடன், அதிமுகவின் கோட்டைகளையும் தட்டி தூக்கியது... குறிப்பாக 21 மாநகராட்சிகளில் அனைத்தையும் திமுக கைப்பற்றியுள்ளது. அத்துடன் 75%க்கும் மேலான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது... இது திமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரலாற்று வெற்றியாக கருதப்பட்டு வருகிறது.. திமுக தொண்டர்களும் மகிழ்ச்சியான மனநிலையில் உள்ளனர்.

 புவனகிரி

புவனகிரி

தனித்து போட்டியிட்ட கட்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவி உள்ளன.. அதிமுக 2வது இடத்தை பெற்றுள்ளது.. பெரும்பாலான கட்சிகள் டெபாசிட் வாங்காமல் மண்ணை கவ்வியுள்ளன.. இந்நிலையில், கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் மட்டும், ஒரே ஒருவார்டில், வாக்கு எண்ணிக்கையின் போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது..

 மிஷின் கோளாறு

மிஷின் கோளாறு

இதனால் அங்கு வாக்கு எண்ணிக்கை தடைபடவும், மறுவாக்குபதிவு மீண்டும் இங்கு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. அதற்கேற்றவாறு, புவனகிரியை தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் தேர்தல் விதிகள் வாபஸ் பெறப்பட்டுவிட்டன.. இந்நிலையில் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ள நிலையில் 4-வது வார்டில் இன்று மறு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது..

ரிசல்ட்

ரிசல்ட்

புவனகிரி பேரூராட்சி 4-ம் வார்டு வாக்குச்சாவடி எண் 4AV ல் இந்த மறு வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. மாலை 6 மணிவரை வாக்குபதிவு நடக்கிறது. ஒரே ஒரு வார்டு என்பதால், வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே, வாக்கு எண்ணிக்கை நடத்தி தேர்தல் முடிவுகள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... ஒரேநாளில் தேர்தல் நடத்தி, ஒரே நாளில் எண்ணப்பட்டு, ரிசல்ட்டும் வெளியாவதால் மிகுந்த எதிர்பார்ப்பையும் கவனத்தையும் புவனகிரி பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+