Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓட்டு போட்டா போடு.. போடாட்டி போ.. வணக்கம் வைக்ககூட யோசிக்கும் வேட்பாளர்கள்.. வர வர பயம் போயிருச்சே

வாக்காளர்களிடம் இருந்து தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் ஒதுங்கி உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Lok Sabha Elections 2019: தேர்தல் களேபரங்கள்...கூட்டணி முதல் பிரச்சாரம் வரை-Oneindia Tamil

    சென்னை: விஷயம் தெரியுமா... வணக்கம் வெக்கறதுக்கு வேட்பாளர்கள் யோசித்து.. கெத்து காட்டி கொண்டே போகிறார்களாம்!

    ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது. ஒரு ஓட்டினால் அரசியலே மாறி போன வரலாறுகளும் நமக்கு உண்டு!

    அதனால்தான் முன்பெல்லாம் வேட்பாளர்கள் தொகுதிக்குள் சென்று ஓட்டு கேட்கும்போது, அவர்களுக்குள் அந்த தேர்தலின் மீதான பயம் இருக்கும்.. கண்ணில் படுபவர்கள் எல்லாம் தமக்கு ஓட்டு போட்டு விட மாட்டார்களா என்ற ஏக்கம் இருக்கும்!

    தயங்க மாட்டார்கள்

    தயங்க மாட்டார்கள்

    கரடு முரடு தோற்றம் உடைய வேட்பாளர்கள்கூட, ஓட்டு கேட்கும் சமயங்களில் "மீசை வெச்ச குழந்தைகளாக" மாறிவிடுவார்கள். சில சமயம்.. வேட்பாளர்கள் வயதில் பெரியவர்களாக இருந்தால் காலில் விழுந்தும் ஓட்டு கேட்க தயங்க மாட்டார்கள்!

    கெத்துதான்

    கெத்துதான்

    ஆனால் இப்போது நிலைமை என்ன தெரியுமா.. வெறும் கெத்துதான்.. நீ ஓட்டு போட்டா எனக்கென்ன, போடாட்டி எனக்கென்ன என்கிற ரீதியில்தான் வேட்பாளர்கள் பொதுமக்களிடம் நடந்து கொள்கிறார்கள். வணக்கம் வெக்கக்கூட தயங்குகிறார்கள்.. கும்பிட்டு வாக்கு கேட்க கூட யோசிக்கிறார்கள்!

    பிரபலங்கள்

    பிரபலங்கள்

    சிவகங்கை தொகுதியில் இந்த கெத்து கொஞ்சம் ஓவராக தெரிகிறதாம். காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமும், பாஜக சார்பில் எச்.ராஜாவும் போட்டியிடுகிறார்கள். சிவகங்கை ஸ்டார் தொகுதிதான்.. ரெண்டு பேருமே பிரபலங்கள்தான்.. வசதிக்கும், பேருக்கும், புகழுக்கும் பஞ்சமில்லைதான்! இவ்வளவு இருந்தாலும் எதற்காக இப்போது போட்டியிட வேண்டும் என்பது தெரியவில்லை!

    ஒரே கும்பிடு

    ஒரே கும்பிடு

    ஆனால் பிரச்சார வண்டியை விட்டு கீழேயே இறங்குவது கிடையாதாம். அதுவும் ஒரு கிராமங்களுக்குள் செல்லும்போது இந்த நிலைமை இன்னும் மோசம்! வாக்கு சேகரிக்க உடன் செல்பவர் வாய் கிழிய பேசி முடித்தவுடன், பெயருக்கு... கடைசியாக... மொத்தமாக எல்லாரையும் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு திரும்புகிறார்களாம்!

    ஈவிகேஎஸ்

    ஈவிகேஎஸ்

    இதுபோலதான், முக ஸ்டாலின் ராமதநாதபுரம் சென்றபோது, இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது எல்லா வேட்பாளர்களுமே கைகூப்பி வணங்கியபடியே மேடையில் நின்றிருந்தனர். ஆனால் ஈவிகேஎஸ் மட்டும் வணக்கம்கூட சொல்லாமல் நின்றிருந்தார்!

    போடாட்டி போங்க

    போடாட்டி போங்க

    இவர்களை விட ஒருபடி மேல போய்விட்டார் தம்பிதுரை.. வாக்கு கேட்க போன இடத்தில், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட, "ஓட்டு போட்டா போடுங்க.. போடாட்டி போங்க.. உங்க கால்ல எல்லாம் விழுந்து கெஞ்ச முடியாது" என்று பச்சையாகவே சொல்லிவிட்டு போனார்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+