ரெம்டெசிவிர் மருந்து தேவையா..கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வாங்கலாம்- 104க்கும் போன் பண்ணுங்க
ரெம்டெசிவர் மருந்து தேவைப்படுவோர் தேடி அலைய வேண்டாம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: ரெம்டெசிவர் மருந்து தேவைப்படுவோர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட உரிய ஆவணங்களை காட்டி மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் பலருக்கு, ரெம்டெசிவிர், ஆக்டெம்ரா உள்ளிட்ட மருந்துகள் பெரிய அளவில் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டிய சூழல் இருப்பதால், டாக்டர்கள் இந்த மருந்தை வெளியில் வாங்க பரிந்துரைத்து வருகின்றனர்.

இதனால் டாக்டர்களின் பரிந்துரை சீட்டுகளுடன் நோயாளிகளின் உறவினர்கள் தெருத்தெருவாக மருந்தகங்களை தேடி அலைகின்றனர். இந்தநிலையில் ரெம்டெசிவிர்,ஆக்டெம்ரா போன்ற மருந்துகள் தேவைப்படுவோர் அரசிடம் பெற்று கொள்ளலாம் என தமிழக மருத்துவ பணிகள் கழகம் அறிவித்துள்ளது.
இதனை அறிந்த நோயாளிகளின் உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்தனர். சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ரெம்டெசிவிர் மருந்து வாங்க நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.
காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச்சென்றனர். டோக்கன் முறையிலும் மருந்து விற்பனை செய்யப்படுவதால் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரெம்டெசிவிர், ஆக்டெம்ரா போன்ற மருந்துகள் தேவைப்படுவோர், நோயாளியின் ஆதார் அட்டை, டாக்டரின் பரிந்துரை சீட்டு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை சான்று, சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் சென்று மருந்துக்கான பணத்தை அளித்து பெற்று கொள்ளலாம்.
ஒரு ரெம்டெசிவிர் ஒரு பாட்டிலின் விலை ரூ.1,545 ஆகும். அந்தவகையில் ஒரு நோயாளிக்கு 6 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் வழங்கப்படுகிறது. மேலும் 104 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டு மருந்து விவரங்களை கேட்டு பெறலாம். தேவையின்றி மருந்து பெற யாரும் வர வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications