ரெம்டெசிவிர் மருந்து தேவையா..கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வாங்கலாம்- 104க்கும் போன் பண்ணுங்க
ரெம்டெசிவர் மருந்து தேவைப்படுவோர் தேடி அலைய வேண்டாம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: ரெம்டெசிவர் மருந்து தேவைப்படுவோர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட உரிய ஆவணங்களை காட்டி மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் பலருக்கு, ரெம்டெசிவிர், ஆக்டெம்ரா உள்ளிட்ட மருந்துகள் பெரிய அளவில் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டிய சூழல் இருப்பதால், டாக்டர்கள் இந்த மருந்தை வெளியில் வாங்க பரிந்துரைத்து வருகின்றனர்.

இதனால் டாக்டர்களின் பரிந்துரை சீட்டுகளுடன் நோயாளிகளின் உறவினர்கள் தெருத்தெருவாக மருந்தகங்களை தேடி அலைகின்றனர். இந்தநிலையில் ரெம்டெசிவிர்,ஆக்டெம்ரா போன்ற மருந்துகள் தேவைப்படுவோர் அரசிடம் பெற்று கொள்ளலாம் என தமிழக மருத்துவ பணிகள் கழகம் அறிவித்துள்ளது.
இதனை அறிந்த நோயாளிகளின் உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்தனர். சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ரெம்டெசிவிர் மருந்து வாங்க நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.
காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச்சென்றனர். டோக்கன் முறையிலும் மருந்து விற்பனை செய்யப்படுவதால் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரெம்டெசிவிர், ஆக்டெம்ரா போன்ற மருந்துகள் தேவைப்படுவோர், நோயாளியின் ஆதார் அட்டை, டாக்டரின் பரிந்துரை சீட்டு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை சான்று, சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் சென்று மருந்துக்கான பணத்தை அளித்து பெற்று கொள்ளலாம்.
ஒரு ரெம்டெசிவிர் ஒரு பாட்டிலின் விலை ரூ.1,545 ஆகும். அந்தவகையில் ஒரு நோயாளிக்கு 6 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் வழங்கப்படுகிறது. மேலும் 104 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொண்டு மருந்து விவரங்களை கேட்டு பெறலாம். தேவையின்றி மருந்து பெற யாரும் வர வேண்டாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications