ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட்.. என்னாச்சு
சென்னை: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்திகாந்த தாஸ் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். சக்திகாந்த தாஸ்க்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை எனவும், சில மணி நேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கி கவர்னரான சக்திகாந்த தாஸ் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. சக்திகாந்த தாஸ் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸ், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். தமிழக கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ், தமிழக அரசில் பல்வேறு துறைகளில் பணியாற்றி இருக்கிறார். மத்திய நிதித்துறை செயலாளராக பணியாற்றிய சக்திகாந்த தாஸ், கடந்த 2018 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார்.
இவரது பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டுடன் முடிவடைய இருந்தநிலையில், மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. தற்போது 67 வயது ஆகும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநராக திறம்பட செயலாற்றி வரும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சக்திகாந்த தாஸ்க்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை எனவும், சில மணி நேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி செய்தி தொடப்ராளர் கூறியிருப்பதாவது:-
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்க்கு அசிடிட்டி (acidity) பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications