சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு.. பகீர் கிளப்பும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி!
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் குறித்து ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார்.
விஜே சித்ரா மறைந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆயினும் சித்ரா மரணம் எதனால் நடந்தது என்பது கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் சித்ரா மரணம் தற்கொலை அல்ல, கொலை என அவரது தோழி ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.
அது போல் சித்ராவின் தாயும் தன மகளை அடித்து துன்புறுத்தி ஹேமந்த் கொலை செய்துள்ளதாகவும் கழுத்தில் கடித்தது போல் பற்கள பதிந்துள்ளதாகவும் சித்ராவின் அம்மா தெரிவித்துள்ளார்.

பகீர் தகவல்
இந்த வழக்கில் ஆளாளுக்கு ஒவ்வொன்று கூறி வரும் நிலையில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி வரதராஜன் பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் ஹேமந்த் சூளைமேட்டில் ஒரு ஹோட்டலில் திருமணம் நடந்ததாகவும் அந்த திருமணத்தை பதிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

சூளைமேட்டில் ஹோட்டலே இல்லை
ஆனால் சூளைமேட்டில் ஹேமந்த் சொல்வது போல் ஒரு ஹோட்டலே இல்லை. 5 மாதங்களுக்கு முன்பே சித்ராவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். ஆனால் காவல்துறையினர் ஹேமந்துடன் சேரந்து கொண்டு தகவல்களை மறைக்கிறார்கள்.

சித்ரா மரண வழக்கு
சித்ரா மரணம் தொடர்பாக இன்னும் பல தகவல்கள் வெளியே வராமல் உள்ளது. சித்ரா மரண வழக்கில் காவல் துறை சரியாக கையாளவில்லை. சித்ரா மரணமடைந்த போது கைரேகை நிபுணர்கள் விசாரிக்கவில்லை என்றும் அந்த இடத்தில் கைரேகை ஆதாரங்களை கைப்பற்றவில்லை.

விசாரணை
சித்ரா மரணம் தொடர்பாக சரியாக விசாரணை நடத்தப்படவில்லை. சிசிடிவி காட்சிகள் குறித்து ஆய்வு செய்யவில்லை. இது போன்ற மரண சம்பவங்கள் நடக்கும் போது ஹோட்டல் நிர்வாகமே வழக்கிற்கு பயந்து சிசிடிவி காட்சிகளை அழித்துவிடும். சிபிசிஐடி விசாரணையில் உண்மை தெரியவரும்.

நீதி
சித்ரா போன்ற பெண்ணுக்கு நீதி கிடைக்காவிட்டால் யாருக்கு நீதி கிடைக்கும். அவர்களுக்கெல்லாம் நீதி கிடைக்காவிட்டால் எதற்கு முதல்வர்? எதற்கு ஆளும் கட்சி என கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின் காவல் துறை நிர்வாகத்தை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையையும் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications