சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு.. பகீர் கிளப்பும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி!
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் குறித்து ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார்.
விஜே சித்ரா மறைந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆயினும் சித்ரா மரணம் எதனால் நடந்தது என்பது கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் சித்ரா மரணம் தற்கொலை அல்ல, கொலை என அவரது தோழி ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.
அது போல் சித்ராவின் தாயும் தன மகளை அடித்து துன்புறுத்தி ஹேமந்த் கொலை செய்துள்ளதாகவும் கழுத்தில் கடித்தது போல் பற்கள பதிந்துள்ளதாகவும் சித்ராவின் அம்மா தெரிவித்துள்ளார்.

பகீர் தகவல்
இந்த வழக்கில் ஆளாளுக்கு ஒவ்வொன்று கூறி வரும் நிலையில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி வரதராஜன் பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் ஹேமந்த் சூளைமேட்டில் ஒரு ஹோட்டலில் திருமணம் நடந்ததாகவும் அந்த திருமணத்தை பதிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

சூளைமேட்டில் ஹோட்டலே இல்லை
ஆனால் சூளைமேட்டில் ஹேமந்த் சொல்வது போல் ஒரு ஹோட்டலே இல்லை. 5 மாதங்களுக்கு முன்பே சித்ராவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். ஆனால் காவல்துறையினர் ஹேமந்துடன் சேரந்து கொண்டு தகவல்களை மறைக்கிறார்கள்.

சித்ரா மரண வழக்கு
சித்ரா மரணம் தொடர்பாக இன்னும் பல தகவல்கள் வெளியே வராமல் உள்ளது. சித்ரா மரண வழக்கில் காவல் துறை சரியாக கையாளவில்லை. சித்ரா மரணமடைந்த போது கைரேகை நிபுணர்கள் விசாரிக்கவில்லை என்றும் அந்த இடத்தில் கைரேகை ஆதாரங்களை கைப்பற்றவில்லை.

விசாரணை
சித்ரா மரணம் தொடர்பாக சரியாக விசாரணை நடத்தப்படவில்லை. சிசிடிவி காட்சிகள் குறித்து ஆய்வு செய்யவில்லை. இது போன்ற மரண சம்பவங்கள் நடக்கும் போது ஹோட்டல் நிர்வாகமே வழக்கிற்கு பயந்து சிசிடிவி காட்சிகளை அழித்துவிடும். சிபிசிஐடி விசாரணையில் உண்மை தெரியவரும்.

நீதி
சித்ரா போன்ற பெண்ணுக்கு நீதி கிடைக்காவிட்டால் யாருக்கு நீதி கிடைக்கும். அவர்களுக்கெல்லாம் நீதி கிடைக்காவிட்டால் எதற்கு முதல்வர்? எதற்கு ஆளும் கட்சி என கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின் காவல் துறை நிர்வாகத்தை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையையும் விடுத்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications