நாடு முடங்கினால்... ஜி.டி.பி.சரியத்தான் செய்யும்... இதில் என்ன வியப்பு... பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்
சென்னை: இந்தியாவின் ஜி.டி.பி. விகிதம் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளதால் தொழிலதிபர்கள் முதல் பி.ஏ. எக்னாமிக்ஸ் மாணவர்கள் வரை அதைப் பற்றி தான் விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தமது கருத்தை ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்துகொண்ட பொருளாதார அறிஞரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான ஜெயரஞ்சன், ஜி.டி.பி. சரிவுக்கான காரணங்களை விளக்கினார்.
மேலும், வருடத்தில் மூன்றில் ஒரு பங்கு நாட்டில் எந்த உற்பத்தியும் நடைபெறாத போது ஜி.டி.பி குறையத்தான் செய்யும் எனத் தெரிவித்தார்.

ஜி.டி.பி விளக்கம்
ஜி.டி.பி. என்பதன் விரிவாக்கம் (Gross Domestic Product) அதாவது நாட்டின் மொத்த உள் உற்பத்தியை குறிப்பதாகும். நாட்டின் முன்னேற்றம் குறித்து அளவிடும் கருவியாக ஜி.டி.பி கருதப்படுகிறது. இதை அளவிடும் முறையானது மிகவும் சவாலானது. காரணம் புள்ளி விவரங்கள் மற்றும் தகவல் தரவுகளை சேமிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் பல உள்ளன. இருப்பினும் உற்பத்தி, வருவாய் உள்ளிட்ட பல வழிமுறைகளில் ஜி.டி.பி கணக்கீடு செய்யப்படுகிறது.

பொருளாதார அறிஞர்
இந்நிலையில் 2020 -2021-ம் ஆண்டுக்கான முதல் காலாண்டு ஜி.டி.பி. விகிதம் 23.9 % ஆக சரிந்தது பற்றி பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனை ஒன் இந்தியா தமிழ் சார்பாக தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது; ''ஒரு நாட்டின் வளர்ச்சியை குறிப்பதில் ஜி.டி.பி. விகிதம் மிகவும் இன்றியமையாதது. நாடு வளர்ச்சி அடைகிறதா தேய்ந்து செல்கிறதா என்பதை அறிய இந்த ஜி.டி.பி. மிக முக்கியமானது.''

பொருளாதாரம்
''வருடத்தில் மூன்றில் ஒரு பங்கு அதாவது நூறு நாட்களுக்கு மேல் அனைத்தையும் முடக்கிப்போட்டுவிட்டது அரசு. பிறகு எப்படி ஜி.டி.பி. வளர்ச்சியை நீங்கள் எதிர்பார்க்க முடியும். நாடே பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ஜி.டி.பி. குறைவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. நாடு இது வரை சந்திக்காத ஒரு பிரச்சனை தான், ஆனால் அதற்கு என்ன செய்ய முடியும். முதலில் கொரோனாவில் இருந்து வெளிவர வேண்டுமே, முதலில் 10 நாட்கள் என்றார்கள் ஒரு மாதம் என்றார்கள் இப்போது 6 மாதம் ஆகிவிட்டது.''

யூகிக்க முடியாது
''பொருளாதார நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இப்போது கண்களை கட்டி காட்டில் விட்ட கதை தான், அதனால் இப்போது எதையும் யூகிக்கவும் முடியாது, ஜி.டி.பி. வளர்ச்சிக்கான வழியையும் ஆராய முடியாது. ஒரு நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், இது எதில் போய் முடியும் என எனக்குத் தெரியவில்லை.'' இவ்வாறு ஓய்வு பெற்ற பொருளாதாரத்துறை பேராசிரியர் ஜெயரஞ்சன் தெரிவித்தார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications