நாடு முடங்கினால்... ஜி.டி.பி.சரியத்தான் செய்யும்... இதில் என்ன வியப்பு... பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்
சென்னை: இந்தியாவின் ஜி.டி.பி. விகிதம் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளதால் தொழிலதிபர்கள் முதல் பி.ஏ. எக்னாமிக்ஸ் மாணவர்கள் வரை அதைப் பற்றி தான் விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தமது கருத்தை ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்துகொண்ட பொருளாதார அறிஞரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான ஜெயரஞ்சன், ஜி.டி.பி. சரிவுக்கான காரணங்களை விளக்கினார்.
மேலும், வருடத்தில் மூன்றில் ஒரு பங்கு நாட்டில் எந்த உற்பத்தியும் நடைபெறாத போது ஜி.டி.பி குறையத்தான் செய்யும் எனத் தெரிவித்தார்.

ஜி.டி.பி விளக்கம்
ஜி.டி.பி. என்பதன் விரிவாக்கம் (Gross Domestic Product) அதாவது நாட்டின் மொத்த உள் உற்பத்தியை குறிப்பதாகும். நாட்டின் முன்னேற்றம் குறித்து அளவிடும் கருவியாக ஜி.டி.பி கருதப்படுகிறது. இதை அளவிடும் முறையானது மிகவும் சவாலானது. காரணம் புள்ளி விவரங்கள் மற்றும் தகவல் தரவுகளை சேமிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் பல உள்ளன. இருப்பினும் உற்பத்தி, வருவாய் உள்ளிட்ட பல வழிமுறைகளில் ஜி.டி.பி கணக்கீடு செய்யப்படுகிறது.

பொருளாதார அறிஞர்
இந்நிலையில் 2020 -2021-ம் ஆண்டுக்கான முதல் காலாண்டு ஜி.டி.பி. விகிதம் 23.9 % ஆக சரிந்தது பற்றி பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனை ஒன் இந்தியா தமிழ் சார்பாக தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது; ''ஒரு நாட்டின் வளர்ச்சியை குறிப்பதில் ஜி.டி.பி. விகிதம் மிகவும் இன்றியமையாதது. நாடு வளர்ச்சி அடைகிறதா தேய்ந்து செல்கிறதா என்பதை அறிய இந்த ஜி.டி.பி. மிக முக்கியமானது.''

பொருளாதாரம்
''வருடத்தில் மூன்றில் ஒரு பங்கு அதாவது நூறு நாட்களுக்கு மேல் அனைத்தையும் முடக்கிப்போட்டுவிட்டது அரசு. பிறகு எப்படி ஜி.டி.பி. வளர்ச்சியை நீங்கள் எதிர்பார்க்க முடியும். நாடே பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ஜி.டி.பி. குறைவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. நாடு இது வரை சந்திக்காத ஒரு பிரச்சனை தான், ஆனால் அதற்கு என்ன செய்ய முடியும். முதலில் கொரோனாவில் இருந்து வெளிவர வேண்டுமே, முதலில் 10 நாட்கள் என்றார்கள் ஒரு மாதம் என்றார்கள் இப்போது 6 மாதம் ஆகிவிட்டது.''

யூகிக்க முடியாது
''பொருளாதார நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இப்போது கண்களை கட்டி காட்டில் விட்ட கதை தான், அதனால் இப்போது எதையும் யூகிக்கவும் முடியாது, ஜி.டி.பி. வளர்ச்சிக்கான வழியையும் ஆராய முடியாது. ஒரு நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், இது எதில் போய் முடியும் என எனக்குத் தெரியவில்லை.'' இவ்வாறு ஓய்வு பெற்ற பொருளாதாரத்துறை பேராசிரியர் ஜெயரஞ்சன் தெரிவித்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications