Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரிசி வாங்க போறீங்களா.. சாப்பாட்டு அரிசி வாங்க போறீங்களா.. திடீர்னு ஷாக்கிங் தந்த "அரிசி".. அட கடவுளே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தக்காளி விலையை தொடர்ந்து அரிசி விலையும் உயர்ந்துவிட்டது.. திடீரென அரிசி விலை உயர்வுக்கு என்னென்ன காரணங்கள்?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. காய்கறிகள் விலையோ அதற்கு மேல் உயர்ந்து கொண்டிருக்கிறது.. இதற்கு நடுவில் மளிகை பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துவிட்டதால், நடுத்தர மக்கள் விழிபிதுங்கி போய் உள்ளனர்.

Rice rate hiked in Tamil nadu and rice has risen sharply up to Rs 10 per kg

முதல்வர் ஸ்டாலின்: அதனால்தான், சில நாட்களுக்கு முன்பு, இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையையும் மேற்கொண்டிருந்தார்..

"யாரெல்லாம் அத்தியாவசிய பொருட்களை பதுக்குகிறார்களோ, அவர்கள் மீதெல்லாம் கடும் கடுமையான நடவடிக்கை எடுங்கள்" என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும், அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

விலைஉயர்வு: அதில், விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக, அரிசி, கோதுமை, பருப்பு, தக்காளி போன்ற பொருட்களின் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார்.

கடந்த மாதம் அரிசி மட்டுமே கிலோவுக்கு 10 ரூபாய் வரை உயர்ந்திருந்தது.. குறிப்பாக, சிவாஜி பிராண்ட் பொன்னி, புழுங்கல் அரிசி 25 கிலோ பாக்கெட் ரூ.1,600-க்கு விலை உயர்ந்துவிட்டது. பொன்னி பச்சரிசி 25 கிலோ ரூ.1,500-க்கு விற்கப்படுகிறது.

ஜிஎஸ்டி: குறிப்பாக, பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி, சோளம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை கடந்த 18ம் தேதி முதல் 5 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பை ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டிருந்தது.. இதற்கு அரிசி ஆலைகள் மற்றும் அரிசி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்... அத்தியாவசியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதால் அரிசி போன்றவற்றின் விலை உயரும் என்று அப்போதே அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

தளர்வான அரிசி ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராது என்றாலும், மாநில உணவுத் துறையானது அனைத்து கடைக்காரர்களுக்கும் அரிசி மற்றும் பிற உணவு பொருட்களை பேக் செய்யப்பட்ட வடிவில் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

கோரிக்கை: இப்போதும் விலை உயர்ந்துவிட்டது.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 40 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி விற்கப்பட்டது.. இப்போது, அதே அரிசி 60 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்து குறைந்துள்ளதால் தமிழ்நாட்டில் அரிசி வேலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாகவும் ஒரு மூட்டைக்கு சராசரியாக ரூ.450 வரை உயர்ந்துள்ளதாகவும் அதிருப்திகள் வெடித்துள்ளன.

உள்நாட்டில் அரிசி உற்பத்தி குறைவு மற்றும் கையிருப்பு போதிய அளவில் இல்லாததே அரிசி விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள். இதைத்தவிர, வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், வெளிநாடுகளிலும் அரிசிக்கு பஞ்சம் வந்துவிடும்போல தெரிகிறது.

வணிகர்கள்: ஒரு மூட்டைக்கு ரூபாய் 450 வரை அரிசி விலை விற்பதால், இந்த விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்களும், பொதுமக்களும் விடுக்க துவங்கி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+