அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவையா?... அமைச்சர் செங்கோட்டையன் பதில் இதுதான்
சென்னை: அதிமுகவின் இரட்டைத் தலைமை முறையால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறியிருப்பதற்கு, அறைக்கும் அமர்ந்து பேச வேண்டிய விவகாரங்களை வெளியில் பேசுவதால், கட்சிக்குள் தேவையில்லா கலகம் தான் ஏற்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கருத்து கூறியுள்ளார்.
உட்கட்சி பூசல் இருந்தாலும், 2 ஆண்டுகள் அதிமுக ஆட்சி தொடரும் எனக் கூறியுள்ள அக்கட்சியின் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா, அதிமுகவில் இருவர் தலைவராக இருப்பதால் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் இருக்கிறது. ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சியை கொண்டு வர பொதுக்குழுவை உடனடியாக கூட்டி பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ள கருத்து, அதிமுகவுக்குள் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் கோஷ்டிப் பூசல் ஏதும் இல்லை என்றும்,அதிமுகவில் தலைவர் பதவி என்ற சொல்லுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் ராஜன் செல்லப்பா கருத்து பற்றி கேட்கப்பட்டது. அறைக்குள் பேசி விவாதிக்க வேண்டிய கருத்துகளை, வெளியில் பேசுவது நல்லதல்ல என்றும், அந்த போக்கு தொடர்ந்தால், அது கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்தும் என்றும் செங்கோட்டையன் பதிலளித்தார்.
மேலும், மாணவர்களிடன் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதற்காக 412 மையங்களில் நீட் தேர்விற்காக பயிற்சி அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். தனியார் பயிற்சி மையங்களை விட அரசு மையங்கள் சிறப்பாக செயல்பட்டதால் கடந்த ஆண்டை விட நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் 48.57 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையே, அதிமுகவில் ஒரே தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியது பற்றி கருத்து தெரிவித்தால் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திவிடும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதே நேரம், இரட்டை தலைமையில் அதிமுக ஆளுமையுடன் உள்ளது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த, இடைத்தேர்தலில் வென்ற 9 எம்எல்ஏக்களை தடுத்ததாக கூறுவது பொய்யானது என்றும் தெரிவித்தார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications