கனமழை: சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 13 பேர் காயம்
சென்னை: சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கி பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களவே பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதும் மாலை நேரத்தில் திடீரென மழை பெய்தும் வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 6 நாட்களுக்கு அதாவது நாளை முதல் வரும் 5 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று விடுத்துள்ள வானிலை எச்சரிக்கையில் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், இன்று மாலை சென்னையில் பல்வேறு இடங்களில் திடீரென கனமழை பெய்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, பல்லாவாரம் என பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. இந்த திடீர் மழையால் அலுவலகம் முடிந்து வீடும் திரும்பிய பலரும் நனந்தைபடி வீடு திரும்பியதை காண முடிந்தது. குடை இன்றி நடந்து வந்த பலரும் கடைகளில் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர்.
அதேபோல், பைக்கில் வந்த பலரும் பேருந்து நிறுத்தங்களில் பைக்கை நிறுத்திவிட்டு ஓரமாக நின்றதையும் காண முடிந்தது. அந்த வகையில், சென்னை சைதாப்பேட்டையின் கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிலும் வாகன ஓட்டிகள் மழையில் நனையாமல் இருக்க ஒதுங்கி நின்றனர். கனமழை கொட்டி கொண்டு இருந்த நேரத்தில் திடீரென பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் மேற்கூரைக்குள் சிலர் சிக்கிக் கொண்டனர். தகவல் கிடைத்தத்தும் விரைந்து வந்த தீ அணைப்புத்துறையினர் மேற்கூரைக்குள் சிக்கியவர்களை மீட்டனர். பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்ததில் 14 பேர் காயம் அடைந்தனர். இதில், பெட்ரோல் பங்க் ஊழியர் கந்தசாமி (வயது 50) என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து காயமடைந்த 13 பேரும் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications