Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக அரசு மாநில உரிமையை விட்டுக்கொடுத்து தேர்தல் கூட்டணியை உறுதிபடுத்துகிறதா? டிடிவி தினகரன் கேள்வி

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் கூடலூர் அருகே தாளூரில் அத்துமீறி அறிவிப்பு பலகை வைத்த கேரள அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாளூர் பகுதியில், கேரள மாநிலம் சார்பில் வரவேற்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி எல்லையில் அத்துமீறி கேரள அரசு ஆக்கிரமித்துள்ளதாகவும், பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்றும், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், தமிழக அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Row Over Kerala Notice Board at Gudalaur TTV Dhinakaran Slams DMK Government

இதையடுத்து, கேரளா - நீலகிரி எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இதுதொடர்பாக கேரள மாநிலம் வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளதாகவும், கூடலூர் பகுதி மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் தாளூரில் அத்துமீறி வைக்கப்பட்டு இருக்கும் கேரள அரசின் அறிவிப்புப் பலகையை உடனடியாக அகற்றுவதோடு, இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் எல்லைக் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழக எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூரில் அத்துமீறி நுழைந்து அறிவிப்புப் பலகை வைத்திருக்கும் கேரள அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்கு உரியது. கூட்டணி தர்மத்திற்காக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை தாரை வார்த்தது போல எல்லைப் பகுதியையும் பறி கொடுப்பதற்கு பெயர் தான் திராவிட மாடலா?

தமிழகத்தின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்திற்கு உட்பட்ட தாளூரில் கேரளத்தை வரவேற்கும் வகையிலான அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு இருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்தின் ஒரு எல்லைப் பகுதியாக இருக்கும் நீலகிரி மாவட்டத்தின் தாளூருக்குள் திடீரென அத்துமீறி நுழைந்து, தங்களது எல்லை என கேரளம் உரிமை கொண்டாடுவதும், அதனைத் தடுக்கவோ, கண்டிக்கவோ முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் திமுக அரசின் மௌனமும் கடும் கண்டனத்திற்கு உரியது.

நீலகிரி மாவட்டத்தில் கேரள அரசு மேற்கொண்டு இருக்கும் இந்த நடவடிக்கை தமிழகத்தின் மற்ற எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்குவதோடு அவர்களின் நில உரிமையும் பறிபோகும் அளவிற்கு அபாயகரமான சூழலை உருவாக்கி உள்ளதாகப் புகார் எழுந்து உள்ளது.

தென் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாகவும் உயிர் நாடியாகவும் முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் ஒரு பகுதியாக அங்குள்ள மரங்களைக் கூட வெட்ட அனுமதிக்காத கேரள அரசு, தமிழகத்திற்குள் நுழைந்து அறிவிப்புப் பலகை வைக்கும் அளவிற்குத் துணிந்திருப்பதை கூட்டாட்சி தத்துவத்திற்கு விடுத்திருக்கும் சவாலாகவே பார்க்க வேண்டி உள்ளது.

திமுக உடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணைக் கட்டுவதில் தீவிரம் காட்டுவதும், தமிழகத்தின் எல்லைப் பகுதியை கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஆக்கிரமிக்க முயல்வதையும் பார்க்கும் போது, திமுக அரசு மாநில உரிமையை விட்டுக் கொடுத்து தான் தேர்தல் கூட்டணியை உறுதிபடுத்துகிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்து உள்ளது.

எனவே, தமிழகத்தின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் தாளூரில் அத்துமீறி வைக்கப்பட்டு இருக்கும் கேரள அரசின் அறிவிப்புப் பலகையை உடனடியாக அகற்றுவதோடு, இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் எல்லைக் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+