மெட்ராஸில் இவ்ளோ பஞ்சத்துக்கு நடுவிலயும்.. எவ்ளோ தண்ணீர்.. ஆஹா பருத்திப்பட்டு!
Recommended Video
சென்னை: குடிக்க கூட தண்ணி இல்லாமல் சென்னைவாசிகள் அல்லோலப்பட்டு வருகிறார்கள் என்றால், இதே சென்னைக்கு அருகில் பளிங்கு மாதிரி தண்ணீர் ஏரி நிறைய வழிந்து கிடக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?!
2 நாளைக்கு ஒருமுறைதான் லாரி தண்ணி வருது. அதுக்கே உன்னை புடி என்னைபுடின்னு சண்டை.. கிடைக்கிற 2 குடம் தண்ணிக்காக ராத்திரியெல்லாம் தூக்கம் கெட வேண்டியிருக்கு.
வீட்டில இருக்கிற ஆண்களுக்கு பைக் எடுத்துட்டு போய் தண்ணி கொண்டுவரவே நேரம் சரியா இருக்கு. இந்த தண்ணீர் பஞ்சத்தில் ஆங்காங்கே வெட்டு குத்து, அடிதடியும் நடந்து வருகிறது. கடைசியில் ரயில்ல தண்ணி கொண்டு வர்ற நிலைமையும் வந்தாகிவிட்டது!

பருத்திப்பட்டு
மெட்ராஸில் இவ்ளோ பஞ்சத்துக்கு நடுவிலயும், ஒரே ஒரு இடத்துல மட்டும் தண்ணீர் நிறைந்து வழிகிறது. அது வேறு எங்குமில்லை.. சமீபத்தில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு ஏரிதான் நீர்நிறைந்து செழிப்பாக காணப்படுகிறது.
|
அமைச்சர் பாண்டியராஜன்
இதை பசுமை பூங்காவாகவே மாற்றிவிட்டார் அமைச்சர் மாபா பாண்டியராஜன். இது அவரது சொந்த தொகுதி. ஏற்கனவே இந்த தொகுதிக்கு பாண்டியராஜன் நிறைய செய்து வருகிறார். தொகுதி மக்களுக்கும் இவர் மீது எப்போதுமே தனிப்பிரியம் உண்டு.

நீர் ஊற்று
மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் இப்படி ஒரு சாதனையை படைத்துள்ளார் அமைச்சர். அதனால் புதிய சுற்றுலா தளமாகவே இந்த பகுதி காணப்படுகிறது ஒரு பக்கம் நீர், மறுபக்கம் பசுமை பொங்கும் பூங்கா, இதற்கு நடுவில் நீர் ஊற்று எனப்படும் ஃபவுன்டெயின் என அமர்க்களப்படுகிறது ஏரி.

சோலைகள்
ஏரிக்கு செல்ல ஒரு தனிபாதை, அது பாலம் போலவே அமைக்கப்பட்டுள்ளது இன்னும் ஸ்பெஷல். அதில் நின்றுகொண்டு பார்த்தால், ஏரியின் மொத்த வியூ-வும் நமக்கு தெரியும். அதுவும் ராத்திரியில் விளக்கு வெளிச்சத்தில் ஜெகஜோதியாக ஜொலிக்கிறது இந்த பகுதி. 28 கோடி ரூபாயில் உருவான இந்த பூங்காவை முதல்வர் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்துள்ளார். நம்ம மெட்ராஸில்.. இப்படி ஒரு இடமான்னு ஆச்சரியமாவும் இருக்கு.. ஏரி நிறைய தண்ணியை பார்த்தால் ஆசையாவும் இருக்கு!

ஏரிகள், குளங்கள்
உண்மையிலேயே பாண்டியராஜனை வாயார பாராட்டலாம். இதேபோல சென்னையிலும், சென்னைக்கு வெளியிலுமாக உள்ள ஏரிகளையும், மாநிலம் முழுவதும் உள்ள குளம், கண்மாய்கள், நீர் நிலைகளை அழகுபடுத்தி நீர் சேமித்து பாதுகாத்தால் எப்படி இருக்கும்.. மனசு வைங்க மக்களே, அரசுகளே.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பட்டாபிராமில் புதுப்பெண் சந்தியா.. கல்யாணமான ஒரே மாதத்தில் கணவன் வீட்டிற்கு போன போது இப்படியா ஆகணும் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications