ரூ.1000 கோடி வருமானம் மறைப்பு! ஜெகத்ரட்சகன் ரெய்டில் சிக்கிய 60 கோடி பணம், தங்கம்-வருமான வரித்துறை
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடந்த நிலையில் ரூ.32 கோடி ரொக்கம், ரூ.28 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு ரூ.400 கோடிக்கு கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவலை வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
திமுகவில் முக்கிய தலைவராக கருதப்படுபவர் ஜெகத்ரட்சகன். முன்னாள் மத்திய அமைச்சரான இவர் தற்போது திமுகவில் எம்பியாக இருக்கிறார். இந்நிலையில் தான் கடந்த 5ம் தேதி முதல் அவரது வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

அவர் நடத்தும் ஹோட்டல் உட்பட அவருக்குத் தொடர்புடைய 100 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட பல இடங்களில் இந்த சோதனைகள் தீவிரமாக நடந்து வந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் எதிர்க்கட்சிகளை மத்திய அரசு மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் பழிவாங்கி வருகிறது. இதுவும் அப்படித்தான். பா.ஜ.கவின் பழிவாங்கும் அரசியலுக்கு அளவேயில்லை என முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சனம் செய்து இருந்தார்.
இந்நிலையில் தான் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை முக்கிய தகவல்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் சோதனையில் சிக்கிய மற்றும் கண்டுப்பிடிக்கப்பட்ட விஷயங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 100 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கல்வி நிறுவனங்களில் இருந்து வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இதையடுத்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் கல்லூரிகளில் இருந்து ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டாத கட்டண ரசீதுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தவறான தகவல்கள் அளித்து ரூ.25 கோடி ஸ்காலர்ஷிப் வழங்கியதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளன.
மேலும் கல்வி நிறுவனங்களில் பயில மாணவர்களை அழைத்து வர ஏஜென்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த வகையில் கமிஷன் தொகை ரூ.25 கோடி மறைக்கப்பட்டுள்ளது. மதுபான வணிகத்தில் போலி வரவு, செலவுகள் காண்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.500 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் கணக்கில் காட்டாத ரூ.300 கோடி அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்து பிற வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடி ரொக்கமும். ரூ.28 கோடி மதிப்புள்ள தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி பார்த்தால் ரூ.1000 கோடிக்கு கணக்கு காட்டாமல் வருமானம் மறைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications