அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்!
சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் கடுமையாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் விளைவாக, வெறும் மூன்று நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.42.65 கோடி மதிப்பிலான பணமும், பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல், தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அதிக அளவில் களமிறக்கப்பட்டுள்ளன.
234 தொகுதிகளிலும் ஒவ்வொரு தொகுதிக்கும் 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் என மொத்தம் 2,160 பறக்கும் படைகள் மற்றும் 2,160 கண்காணிப்பு குழுக்கள் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, மார்ச் 18ஆம் தேதி நிலவரப்படி பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ரூ.42.65 கோடியாகும். இதில் ரூ.2.37 கோடி ரொக்கப் பணம் அடங்கும். அதேபோல், ரூ.0.18 கோடி மதிப்பிலான மதுபானங்களும், ரூ.2.88 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ரூ.16.42 கோடி மதிப்பிலான விலைமதிப்புள்ள உலோகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனுடன், வாக்காளர்களை கவர்வதற்காக பயன்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படும் ரூ.20.80 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள் மற்றும் பிற பொருட்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் காலங்களில் பணப் புழக்கம் மற்றும் வாக்காளர்களுக்கு சலுகைகள் வழங்கும் நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்பதால், அதை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு கண்காணிப்பு முறைகளை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, பணம், மதுபானம், போதைப் பொருட்கள் மற்றும் இலவச பொருட்கள் விநியோகத்தை தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கமளிக்கையில், "தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்கள் மற்றும் அமலாக்க அமைப்புகள் இணைந்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள், வாக்காளர்களை கவரும் முயற்சிகள் ஆகியவற்றைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.
தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே இவ்வளவு பெரிய அளவில் பறிமுதல் நடைபெற்றிருப்பது, தேர்தல் ஆணையம் இந்த முறை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தி வருவதை காட்டுகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த கண்காணிப்பு மேலும் தீவிரமாகும் என்பதால், அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் விதிகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.
-
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
29 சீட் டீல் ஓகே? சென்னை வரும் டெல்லி விஐபி.. புஸ்ஸான தவெக பிளான்.. ஜெட் வேகத்தில் திமுக -
விஜய் குடுமி சங்கீதா கையில்.. தேர்தலிலேயே நிற்க முடியாது? எலக்சன் நேரத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்! பரபர -
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து! -
சம்பளத்துடன் விடுமுறை கட்டாயம்.. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு -
90 சீட் பேரம்? ஆதவ் அர்ஜுனா அப்படி சொன்னாரே.. இல்லவே இல்லை என திட்டவட்டமாக மறுத்த விஜய்! -
விஜய் பாடல்களுக்கு தடை.. பள்ளி ஆண்டு விழாவில் பயன்படுத்த கட்டுப்பாடு.. காரணம் இதுதான் -
பாஜக உள்ள வந்துரும்ங்க தோழர்.. சிபிஐக்கு 5 தொகுதியை தள்ளிவிட்ட திமுக! 2021ல் என்ன நடந்தது தெரியுமா? -
வதந்திகளை நம்பாதீங்க.. மதசார்பில் உறுதி! இப்தார் விழாவில் பாஜக கூட்டணிக்கு ரெட் சிக்னல் போட்ட விஜய் -
விஜய் மானத்தை வாங்கும் அருண்ராஜ்.. சில்வர் டப்பாவையடுத்து, பூஸ்ட் பாட்டில்! தவெக ஸ்டிக்கரை பாருங்க














Click it and Unblock the Notifications