சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ 500 கோடி ஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு
சென்னை: சிங்கார சென்னை 2. O திட்டத்திற்காக ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சிங்கார சென்னை என்பது தலைநகர் சென்னையை அழகுப்படுத்தும் திட்டமாகும். 1996 இல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது அவர் டெல்லி, மும்பை ,கொல்கத்தா போன்ற பெருநகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னையை அழகுப்படுத்த சிங்கார சென்னை திட்டத்தை கொண்டு வந்தார். இந்த நிலையில் ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஸ்டாலினின் கனவு திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
இதையடுத்து தற்போது முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில் புதுபொலிவுடன் சிங்கார சென்னை திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடிக்கு உத்தரவிட்டார். அதன்படி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் புதிய சாலைகள் போடுவது, பாலங்கள் கட்டுவது, சுவரொட்டிகளை நீக்கி சுத்தம் செய்யும பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடலோர பூங்காக்கள்
அது போல் புதிய பூங்காக்கள் அமைப்பது, கடலோர பூங்காக்கள் அமைப்பது , சென்னை கடற்கரைகளை சுற்றுலாத் தலமாக மாற்றும் ப்ராஜக்ட் ப்ளூ என்ற திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. முதல் கட்டமாக சென்னையை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Recommended Video

கொசுக்கள்
நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு கொசுக்களை ஒழிக்க டிரோன் மூல்ம மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அது போல் வடகிழக்கு பருவமழையின் போது சாலைகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் நீர்நிலைகள், மழை நீர் கால்வாய்கள் தூர்வாரப்படுகின்றன. இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு ரூ 500 கோடி நிதி ஒதுக்கப்படும் என கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு
சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இணையத்தின் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அது போல் சாலை பணிகள் இருந்தால் அதற்கேற்ப போக்குவரத்தை மாற்றி கொள்ளும் வகையில் இணையதளத்தில் மாநகராட்சி சார்பில் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
-
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications