தமிழகத்தில் இதுவரை ரூ.54.43 கோடி ரொக்கம்... கிலோ கணக்கில் தங்கம் & வெள்ளி பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: மோசடி பேர்வழிகள் எல்லாம் மோடியை மோசடி என்று சொல்லக்கூடாது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை மொத்தம் ரூ.54.43 கோடி பணம், ரூ.74 கோடி மதிப்பிலான 261 கிலோ தங்கம் மற்றும் 346 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளளதாக கூறினார்.

Rs. 54.43 crore has been seized in Tamilnadu Says Satyabrata Sahoo

இதே போல், 14 மடிக்கணினிகள், 279 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

சுயேட்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார் என்று கூறிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி ஏப்ரல் 10 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என்றார்.

அதேபோன்று, கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தமிழகத்தில் 25.5 கோடி பணமும் ரூ. 51. 83 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறினார்.

மேலும், 2,106 பறக்கும் படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த மாதம் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல முனைப் போட்டி நிலவுவதால் இன்னும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+