Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோட்டையில் ஸ்டாலின்.. அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றும் ஆர்.எஸ்.பாரதி.. திமுக வெளியிட்ட அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுகவின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நாளை தேசியக்கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

திமுகவின் அமைப்புச் செயலாளராக இருப்பவர்கள் தேசியக் கொடி ஏற்றி வந்தனர். ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றினார்.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றிய நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொடியேற்றினார்.

 திமுக தலைமை அலுவலகம்

திமுக தலைமை அலுவலகம்

திமுகவின் தலைமை அலுவலகமான, சென்னை அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி, ஆண்டுதோறும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உத்தரவின்படி கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

அமைப்புச் செயலாளர்கள்

அமைப்புச் செயலாளர்கள்

அப்போது திமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்த டி.கே.எஸ்.இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றினார். ஓரிரு முறைகள் தவிர, திமுகவின் அமைப்புச் செயலாளர்களாக உள்ளவர்களே தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

 ஸ்டாலின் ஏற்றினார்

ஸ்டாலின் ஏற்றினார்

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தேசியக் கொடியை ஏற்றிய பின், மு.க.ஸ்டாலின் அதற்கு வணக்கம் செலுத்தாமல் சென்றதாக வெளியான வீடியோவைச் சுட்டிக்காட்டி அதிமுக சார்பில் தேசியக்கொடி ஏற்றும் விதிமுறையை திமுக தலைவர் மீறியதாக ப்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது.

 கோட்டையில் ஸ்டாலின்

கோட்டையில் ஸ்டாலின்

கடந்த ஆண்டு, சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொடியேற்றினார். இந்த ஆண்டும் நாளை சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்ற இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

அண்ணா அறிவாலயத்தில் தேசியக்கொடி

அண்ணா அறிவாலயத்தில் தேசியக்கொடி

75வது சுதந்திர தினத்தையொட்டி நாளை அண்ணா அறிவாலய வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட உள்ளது. இந்த முறையும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசியக் கொடியை ஏற்றி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாட்டின் விடுதலை திருநாளினையொட்டி, நாளை கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் தி.மு.க தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட உள்ளது.

Recommended Video

    தேசியக்கொடி தயாரிப்பதில் மகிழ்ச்சி... சிவகங்கையில் இஸ்லாமிய பெண்கள் பெருமிதம்!
    திமுக அறிவிப்பு

    திமுக அறிவிப்பு

    காலை சரியாக 8 மணிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேசியக் கொடி ஏற்றி வைக்கிறார். இதில், சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+