Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயரே எகிறிய மகளிர் உரிமைத்தொகை.. இ-சேவை மையத்தில் அப்ளை பண்ணிட்டீங்களா? சென்னையில் என்னாச்சு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்துவரும்நிலையில், சில சிக்கல்கள் ஆங்காங்கே முளைத்து வருகின்றன.

உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்தும், 57 லட்சம் பேருக்கு ரூ.1000 உரிமைத்தொகை மறுக்கப்பட்டுள்ளது.. என்ன காரணத்துக்காக உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதுகுறித்த மெசேஜ்கள், அவரவர் செல்போன்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

rs1000 Magalir Urimai Thogai Scheme and what happened in Chennai Manali Office e service

மேல் முறையீடு: அதில் பெரும்பாலும், கார் வைத்திருப்பது, சொத்து அதிகம் இருப்பது, கரண்ட் பில் அதிகமாக வந்திருப்பதை காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றன. எனினும், 1000 ரூபாய் கிடைக்காதவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது..

மேல்முறையீடு செய்யலாம், அதுவும் இ-சேவை மையம் வழியாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு சொல்லவும், அதன்படியே விண்ணப்பித்து வருகிறார்கள் ஆனால், தமிழகத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் பெண்கள் கூட்டம் அலை மோத தொடங்கிவிட்டதாம்.. இ-சேவை மையம் திறப்பதற்கு பல மணி நேரத்துக்கு முன்பே, பெண்கள் வந்து காத்திருக்க துவங்கிவிட்டனர்.

இந்த மேல்முறையீட்டு மனுவை ஆர்டிஓ ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அரசு கூறியிருக்கிறது.. எனினும், இ-சேவை மையங்கள், தனியார் இ-சேவை மையங்கள், இண்டர்நெட் மையங்களிலும் பெண்கள் கூட்டம் பெருகி கொண்டிருக்கிறது. இதனால், தள்ளுமுள்ளும் சில இடங்களில் ஏற்படுகிறது..

தள்ளுமுள்ளு: மணலி மண்டல அலுவலகத்தில் இப்படித்தான் பெண்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், அங்கிருந்த கதவு கண்ணாடி டமார் என உடைந்து நொறுங்கியதுடன், அந்த மையத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள், மற்ற பொருட்களும் கீழே விழுந்து உடைந்துவிட்டது... இ-சேவை மைய ஊழியர் கீதா என்பவர், பெண்கள் கூட்டத்தில் வசமாக சிக்கி கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்.. பிறகு அவரை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்..

கள ஆய்வுகள்: ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றுடன் இ-சேவை மையத்தில் குவிந்து வருகிறார்கள்.. விண்ணப்பங்களை தேர்வு செய்ய அவர்களது வீடுகளுக்கு சென்று விசாரிக்க தேவையான ஊழியர்களை தாசில்தார் ஏற்பாடு செய்து வருகிறார். தகுதியான பயனாளிகள் கிடைத்ததுமே, அவர்கள் உரிமைத் தொகை திட்டத்தில் இணைக்கப்பட உள்ளார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+