Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.3000 பொங்கல் பரிசு டோக்கன்கள்.. பயனாளிகளின் ரொக்க பணம்! தினமும் 400 பேருக்கு வீடு வீடாக சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவி வரும் நிலையில், கூட்டுறவு துறை குட்நியூஸ் ஒன்றை பிறப்பித்துள்ளது.. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது, தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே, பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரொக்கம் வழங்கப்படுமா, எவ்வளவு வழங்கப்படும்? எப்போது வழங்கப்படும்? என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Pongal gift Tokens Beneficiaries TN Gov cooperative department 400

பொங்கல் பரிசு தொகுப்பு - சர்ப்ரைஸ்

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரொக்கம் வழங்கப்படாமல் இருந்தது விமர்சனங்களை எழுப்பி வந்தது.. காரணம், அதிமுக ஆட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 ரொக்கம் கொடுக்கப்பட்டது. இதுவரை கொடுக்கப்பட்ட அதிகபட்ச ரொக்கம்தான் 2500 ரூபாய்தான்..

அதற்கு பிறகு திமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது... இதையடுத்து., விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இதுவரை வழங்காத ரொக்கம் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டது..ரூ.5000 தரலாமோ என்றுகூட அரசு நினைத்தது..ஆனால், மகளிர் உரிமை தொகை மாதம் வழங்குவதால் நிதி நெருக்கடி சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு வீடு வீடாக டோக்கன்

எனவே, அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பில் அரிசி, சர்க்கரை மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக அரிசி , சர்க்கரை உள்ளிட்டவை ரேஷன் கடைகளுக்கு பெருமளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கூட்டுறவுத்துறை - டோக்கன்கள்

இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரான நந்தகுமார் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கும் மிக முக்கியமான ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார்.

ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவது தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் மற்றும் டோக்கன் வினியோகம் குறித்தும் குறித்தும் பின்வரும் அறிவுரைகளை பின்பற்றி இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட அறிவுறுத்தப்படுகிறது.

மண்டலங்களில் செயல்படும் நியாயவிலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு ஏற்ப ஜனவரி 2-ந் தேதிக்குள் டோக்கன்கள் அச்சிடப்பட்டு வினியோகம் செய்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை கொடுப்பார்கள்

100 ரேஷன் அட்டைதாரர்கள்

ரேஷன் அட்டைதாரர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கப்பட வேண்டும். முதல் நாள் முற்பகல் 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பிற்பகல் 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பிற்பகல் 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் செய்திட ஏதுவாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும்.

இரண்டாவது நாட்களில் இருந்து காலையில் 200 பேர், பிற்பகலில் 200 பேர் என மொத்தம் 400 பேருக்கு பொங்கல் பரிசு தொகைக்கு விநியோகம் செய்திட வேண்டும்

சட்டம் ஒழுங்கு பிரச்சனை எழக்கூடிய ரேஷன் கடைகள், அதிக கூட்ட நெரிசல் ஏற்படக்கூடிய ரேஷன் கடைகள் போன்ற கடைகளின் பட்டியல்கள் முன் கூட்டியே தயார் செய்யப்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டு போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+