7 தமிழர் விடுதலை.. ஜனாதிபதிக்கு அனுப்பப்படாத தீர்மானம்.. ஆர்டிஐ மூலம் பகீர் தகவல்
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசால் அனுப்பப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பப்படாமல் இருந்தது ஆர் டி ஐ மூலம் பகீர் தகவல் கிடைத்துள்ளது.
1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், நளினி, சாந்தனு, பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

[முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பெங்களூரில் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் ]
தண்டனை காலம் முடிந்தும் இவர்கள் சிறையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபையில் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் அனுப்பிய தீர்மானத்தை ஜனாதிபதி நிராகரித்ததாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் இதுகுறித்து ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்து தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஜனாதிபதி நிராகரித்ததாக அவரது பெயரில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது அம்பலமானது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications