ரயில்வே கம்பளிகள் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படுகின்றன! ஆர்டிஐ-ல் வெளியான ஷாக் தகவல்
சென்னை: ரயில்களில் ஏசி கோச்களில் பயணம் செய்யும் போது போர்வைகள் வழங்கப்படுகின்றன. இந்த போர்வைகள் குறித்து அடிக்கடி புகார்கள் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ரயில்களில் பயன்படுத்தப்படும் போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை துவைக்கப்படுகிறது? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் விவாதங்களை கிளப்பியுள்ளன.
சர்வதேச அளவில் இந்தியன் ரயில்வே மிகவும் பழமையானதாகும். ஒவ்வொரு நாளும் சுமார் 23 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரயில்வே கொண்டு சேர்க்கிறது. இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால், ரயில் துறை மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது.

நேரம் கடைபிடிப்பதில்லை, போதிய ரயில்கள் இல்லை, கூடுதலான முன்பதிவில்லா பெட்டிகள் இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது ஒருபுறம் எனில், மறுபுறம் ரயில்களில் வழங்கப்படும் சேவை சரியாக இல்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் போர்வைகள் சுத்தமாக இருப்பதில்லை என பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
ஏசி வகுப்புகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை துவைக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி. இதற்கு ரயில்வே அமைச்சகத்தின், ஹவுஸ் கீப்பிங் மேலாண்மை (என்எச்எம்) பிரிவு அதிகாரி ரிஷு குப்தா பதிலளித்துள்ளார். அதில், கீழே விரிக்க கொடுக்கப்படும் போர்வைகள் ஒவ்வொரு முறையும் துவைக்க அனுப்பி வைக்கப்படுவதாகவும், கம்பளிகள் மாதத்திற்கு ஒருமுறை துவைக்க அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (TNIE) செய்தி ஊடகம், ரயில்வே துறை சார்ந்த ஊழியர்களிடம் பேசியபோது கூடுதல் தகவல்கள் வெளியாகின. அதாவது, பெரும்பாலும் போர்வைகளில் அழுக்கு, கறை, துர்நாற்றம், ஈரப்பதம் இல்லையெனில் அவை மடித்து மீண்டும் பயன்பாட்டுக்காக ரயில் பெட்டியிலேயே வைக்கப்படும் என்றும், மேற்குறிப்பிட்டவை இருந்தால் மட்டும் அவை துவைப்பதற்கு போடப்படும் என்றும் ஊழியர்கள் TNIEவிடம் கூறியுள்ளனர்.
மேலும் சில அதிகாரிகள், "கம்பளிகள் கனமானவை. அவற்றை துவைப்பது கடினமானது. எனவே, அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டிய நேரம் இது" என்று கூறியுள்ளனர்.
இந்தியன் ரயில்வேயில் பயன்படுத்தப்படும் போர்வை, கம்பளி, தலையணை உறை ஆகியவற்றை துவைக்க 46 சலவை மையங்கள் இருக்கின்றன. இந்த மையம் மைந்துள்ள இடம், சலவை இயந்திரம் ஆகியவை ரயில்வே துறைக்கு சொந்தமானவையாகும். ஆட்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். இது தவிர 25 BOOT சலவை மையங்கள் இருக்கின்றன. இது தனியாருடையதாகும்.
எப்படி இருந்தாலும் தினமும் பயணிகள் பயன்படுத்திய கம்பளிகளை மற்றாரு பயணிகள் பயன்படுத்துவதன் மூலம், தோல் சார்ந்த நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
என்ன மக்களே நீங்கள் அடுத்த முறை ரயிலில் செல்லும்போது கையோடு போர்வைகளை கொண்டு செல்வீர்களா?
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications