தம்பி யுவன்! தமிழில் நமாஸ் செய்ய முடியுமா?.. படம் காட்டுவதில் பயனில்லை.. பாஜக எஸ். ஆர். சேகர்
சென்னை: தமிழில் நமாஸ் செய்ய முடியுமா என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கு பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு இருவரையும் ஒப்பிட்டு முன்னுரை எழுதிய இளையராஜாவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தையும் கருத்தையும் பதிவிட்டிருந்தார்.
கத்தரி வெயில் நெருங்குகிறது.. அனல், பசி மயக்கத்திற்கு 3 பேர் சுருண்டு பலி.. கிலியை தரும்
கருப்பு நிற உடை அணிந்து கொண்டு கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என குறிப்பிட்டிருந்தார். திராவிடன் என கூறியதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் யுவன் சங்கர் ராஜாவை விட நான் கருப்பு, நான்தான் கருப்பு திராவிடன், அவர் கருப்பு என்றால் நான் அண்டங்காக்கை கருப்பு என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் நீ திராவிடனா, தமிழனா அதை முதலில் சொல்ல வேண்டும்.
யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா சின்னபிள்ளை என்பதால் புரிதல் இல்லை. எருமை மாடு கூடத்தான கருப்பாக இருக்கிறது. அதற்கு அது திராவிடனா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் சீமானின் கருத்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவிக்கலாம். அது நாகரீகமாக இருக்க வேண்டும்.
எருமை மாடு
எருமை மாடு உடன் ஒப்பிட்டு பேசுவது திராவிடத்தை கொச்சைப்படுத்துவது ஆகும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தம்பி யுவன் நீங்கள் பிறப்பால் தமிழன். மதத்தால் இன்று இஸ்லாமியன். இஸ்லாம் தமிழை ஏற்குமா?
பட்ம போட்டு படம் காண்பித்து
தமிழில் பெயர் வைத்து கொள்ள முடியுமா? தமிழில் நமாஸ் செய்ய முடியுமா? படம் போட்டு படம் காண்பித்து பிரயோசனமில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ் ஆர் சேகர் தெரிவித்துள்ளார். இதே போல் இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ்தான் என இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூறியிருந்தார்.
தமிழ் கற்பிக்க நிதி ஒதுக்கட்டும்
அதற்கு எஸ்.ஆர். சேகர் கூறுகையில், தம்பி AR ரக்மான் பேச்சை வரவேற்கிறேன். முதலில் ரக்மான் குடும்பத்தார் பெயரை தமிழில் மாற்றட்டும். துவாவை உருதுவிலிருந்து தமிழுக்கு மாற்றட்டும்...பிறகு தமிழக அரசு குறைந்தது ஒரு 5 இந்தி State ல் தமிழ் கற்பிக்க நிதி ஒதுக்கட்டும்... இதற்கு ரக்மான் உதவினால் தமிழ் பரவும் என தனது பதிவில் எஸ் ஆர் சேகர் குறிப்பிட்டிருந்தார்.