"பாயும் புலி" முழுபலத்தோட வரும்.. அப்ப ஓட்டம் பிடிப்பீங்க.. எஸ்ஏ சந்திரசேகருக்கு எஸ் வி சேகர் பதிலடி
Recommended Video
சென்னை: புலி முழுபலத்தோட வரும் போது துண்டை காணும் துணியை காணும்னு ஓட்டம் பிடிக்கும் போது என்ன சொல்லணும்னு இப்பவே யோசிச்சு வச்சிக்கோங்க என இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகருக்கு எஸ் வி சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.
ரஜினி கடந்த 2017-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இரு ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில் அவர் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அடுத்த ஆண்டு கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜய்யை அரசியலில் இறக்க அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் முயற்சித்து வருகிறார். அதே சமயம் ரஜினியின் அரசியல் வருகை குறித்து எஸ் ஏ சி கடும் பதிலடி கொடுத்து வருகிறார்.

விஜய்
அண்மையில் நடந்த ஒரு விழாவில் எஸ் ஏ சந்திரசேகர் பேசுகையில் தமிழன் என்று சொல்வதில் எப்போதுமே, ஒரு திமிர் உண்டு. அப்படிப்பட்ட தமிழன்தான் தமிழகத்தை ஆள வேண்டும். தமிழன்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என அவர் கூறிய கருத்து விஜய்யை விமர்சிக்கும் வகையில் இருந்தது.

எஸ் ஏ சி விமர்சனம்
இந்த நிலையில் அவரிடம் ரஜினியின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் புலி வருது கதை தான் ரஜினியின் அரசியல் என கடுமையாக எஸ் ஏ சி விமர்சனம் செய்திருந்தார்.
|
ரஜினி அரசியல்
இதுகுறித்து பாஜகவின் எஸ் வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில் புலி வருது கதைதான் ரஜினியின் அரசியல் - SA சந்திரசேகர்.

நேர்மையான ஒருத்தர்
#Rajini 2021ல புலி முழுபலத்தோட வரும் போது துண்டைக்காணும் துணியை காணும்னு ஓட்டம் பிடிக்கும் போது என்ன பேசணும்னு இப்பவே யோசிச்சு வைச்சுகுங்க. நேர்மையான ஒருத்தர் தமிழக அரசியலுக்கு வரக்கூடாதுன்னு தெளிவா இருக்காப்ல. ரஜினி நிச்சயம் தமிழகத்தின் முதல்வராவார் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications