ஏன் குருமூர்த்தியை முதலமைச்சராக்கி அழகு பார்க்க நினைக்கிறாரா.. ரஜினிக்கு எஸ் வி சேகர் கேள்வி
சென்னை: ஏன் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை முதல்வராக்கி அழகு பார்க்க நினைக்கிறாரா என ரஜினிக்கு எஸ் வி சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
முதல்வர் பதவி வேண்டாம் என்றும் அதுகுறித்து நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை என ரஜினி கூறியிருந்ததை சுட்டிக் காட்டிய எஸ் வி சேகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அரசியல் மாற்றத்திற்கு மூன்று திட்டங்களை நான் வைத்துள்ளேன். அதில் முதல் திட்டம் தேர்தலுக்கு பிறகு பெரும்பாலான கட்சி பதவிகளை நீக்குவது. அடுத்தப்படியாக இளைஞர்களுக்கு எம்எல்ஏ சீட் வழங்குவது. மூன்றாவதாக முதல்வர் வேட்பாளர்.

தேசிய கட்சிகள் தவிர பெரும்பாலான மாநில கட்சிகளில் அக்கட்சியின் தலைவரே முதல்வராகவும் இருப்பார். முதல்வர் பதவி பற்றி நான் நினைத்துக் கூட பார்த்தது இல்லை. சட்டசபையில் உட்கார்ந்து பேசும் எண்ணம் எனக்கு ஒரு போது்ம இல்லை. எனக்கு அது செட்டும் ஆகாது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை சுட்டிக் காட்டி பாஜக பிரமுகர் எஸ் வி சேகர் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்புகையில் ஏன் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை முதல்வராக்கி அழகு பார்க்க நினைக்கிறாரா என கேட்டுள்ளார்.
அது போல் கட்சி வேறு, ஆட்சி வேறு என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்த ட்வீட்டை மேற்கோள்காட்டி எஸ் வி சேகர் மேலும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் கட்சி நடத்த பணமும் ஆட்சி நடத்த ராஜதந்திரமும் தைரியமும் தேவை. ஆகவே ரஜினி சொல்வது நிஜத்தில் நடக்காது.
புரட்சி இந்தியாவில் வெடிக்காது புஸ்வாணமாகிவிடும். கட்சி ஆட்சி இருவர் கையில் இருந்தால் முதலில் சின்னம் முடங்கும். இதுவே வரலாறு என தெரிவித்துள்ளார். இதற்கு எஸ்வி சேகர் கூறுகையில் இந்த ட்வீட்டை மேற்கோள்காட்டி எஸ் வி சேகர் மேலும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் கட்சி நடத்த பணமும் ஆட்சி நடத்த ராஜதந்திரமும் தைரியமும் தேவை. ஆகவே ரஜினி சொல்வது நிஜத்தில் நடக்காது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications