"சனாதனம்" ஆ ராசாவுக்கு ஆளாளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. எஸ் வி சேகர் யாரை சொல்கிறார்?
சென்னை: சனாதனம் குறித்து பேசிய திமுக எம்பி ஆ ராசாவுக்கு ஆளாளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி எம்பி ஆ ராசா ஒரு விழாவில் பேசுகையில் இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா, இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன், இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன், இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்.
எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தையும் முறியடிக்கிற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும் முரசொலியும் தி.க.வும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என கடுமையாக விமர்சித்திருந்தார்.

எம்பி பதவி
அவரை எம்பி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆ ராசாவை முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் திமுக எம்பி ராசாவின் கருத்து குறித்து எதையும் தெரிவிக்கவில்லை.

ஜாதி
இந்த நிலையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட எஸ் வி சேகர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் எந்த ஜாதியும் தாழ்ந்த ஜாதி என எதிலும் சொல்லப்படவில்லை. பாதத்திலிருந்து பிறந்தவன் தாழ்ந்த ஜாதி என்கிறார்கள். அது கிடையாது, பாதம் இல்லாவிட்டால் ஒருவனால் நிற்க முடியுமா?

தொழில்களை வைத்துதான் வர்ணாசிரமம்
தொழில்களை வைத்துதான் வர்ணாசிரமம் வந்ததே தவிர பிறப்பினால் வரவே இல்லை. ஒரு பொய்யை சொல்லிவிட்டு தொடர்ந்து சொல்லும் போது படிக்காதவர்கள் கிட்டயும் ஓட்டு வங்கியாகவும் மாற்றுவதற்கு பேச கூடிய ஒரு விஷயம். எப்போதுமே அரசியலில் ஒரு பிரச்சினையை திசைதிருப்ப மற்றொரு பிரச்சினையை கிளப்புவர்.

மின் கட்டண உயர்வை மறந்தாச்சு
தற்போது எல்லோருமே மின் கட்டண உயர்வை பற்றி மறந்துவிட்டார்கள். சனாதனத்தை பற்றி பேசிவிட்டார்கள். இந்து மதத்தை பற்றி பேசிவிட்டார்கள் என அதை பற்றித்தான் பேசுகிறார்கள். என்னை பொருத்தவரைக்கும் ஆ ராசாவுக்கு ஆளாளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என் தாய் மிகவும் உயர்ந்தவள் என நான் நினைக்கிறேன், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி நமக்கு என்ன இருக்கு என எஸ்வி சேகர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications