விஜய்க்கு மட்டும் இவ்வளவு எதிர்ப்பு வருகிறது ஏன் தெரியுமா? ஏர்போர்ட்டில் கொதித்த எஸ்.ஏ.சந்திரசேகர்
சென்னை: விஜய்க்கு மட்டும் இவ்வளவு எதிர்ப்பு வருகிறது என்றால், அவர் வளர்கிறார் என்றுதான் அர்த்தம் என அவரது தந்தையும், இயக்குநருமான, எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
பிகில்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய விஜய், "பேனர் விழுந்து சாலை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மேல பழி போடுவது என்று தெரியாமல் லாரி டிரைவர் மேலேயும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுகிறார்கள்" என்றும், யாரை எங்கு வைக்க வேண்டுமோ, அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும்" என்றும் விஜய் பேசினார்.

விஜய் பேச்சுக்கு, அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விஜய் பேச்சுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, விஜய்யின் தந்தை, எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி ஏர்போர்ட் வந்திருந்தார்.
அங்கு நிருபர்கள் அவரிடம், விஜய் சந்தித்து வரும் விமர்சனங்கள் குறித்து கேள்விகளை முன்வைத்தனர். இதற்கு, அவர் அளித்த பதில்: சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பேனர் விழுந்து விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்.
அனைவரும் பேசிவரும் ஒரு விஷயத்தைப் பற்றிதான் விஜய் பேசினார். நீதிமன்றமே சுபஸ்ரீயின் விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை எனக் கேள்வி கேட்டுள்ளதே.
ஆனால், விஜய் பேசிய கருத்துக்கு மட்டும் அமைச்சர்களும், அதிமுகவினரும், ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. விஜய்க்கு இவ்வளவு எதிர்ப்பு வருகிறது என்றால் அவர் வளர்கிறார் என்று அர்த்தம். நீங்கள் பேசினால், இவ்வளவு எதிர்ப்பு வருமா, இல்லைதானே? விஜய் பேசினால் எதிர்ப்பு வருகிறது என்றால் அவர் வளர்கிறார் என்று அர்த்தம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விஜய் மேடைப்பேச்சுக்களை வைத்து பார்த்தால், அவர் அரசியலுக்கு வரப்போவது உறுதியா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, "எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லை" என்று தெரிவித்தார், எஸ்.ஏ.சந்திரசேகர்.
இதுபற்றி அதிமுக தரப்பினரிடம் கேட்டோம். அவர்கள் கூறுகையில், "சுபஸ்ரீ பேனர் விழுந்து பலியானது துரதிருஷ்டவசமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதுகுறித்து, உடனே கருத்து சொல்லாத, விஜய், பிகில் பட இசை வெளியீட்டு விழாவரை காத்திருந்தது ஏன்? விஜய் நடித்த, திரைப்படம் ஒன்றிற்கு கட்அவுட் வைத்த ரசிகர், மேலேயிருந்து கீழே விழுந்து இறந்தார். அந்த வீடியோ கூட வெளியானது. ஆனால், இவர் தனது படங்களுக்கு கட்அவுட் வைக்க வேண்டாம் என்று அப்போதே கூறியிருக்க வேண்டும்" என்று ஆவேசமாகிறார்கள்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications