நிவர் புயலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகள் என்ன?
சென்னை: நிவர் புயலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகள் என்ன என்பதை மாநில வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது.
வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் தமிழக கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. நிவர் புயலால் கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருக்கிறது.
நிவர் புயலால் தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புயல் கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையரகம் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

வீட்டில் இருப்பவர்களா?
நீங்கள் புயல் தாக்கும் போது வீட்டில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? முதலில் பதற்றப்படாமல் இருக்க வேண்டும்; அடுத்து வீட்டில் ஜன்னல், கதவுகளை நன்றாக மூடி வைக்க வேண்டும். ஏதேனும் அவசர உதவி எணில் குறிப்பிட்ட எண்களை அழைத்து கேட்கலாம்.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளிட்டவற்றின் அதிகாரப்பூர்வ பக்கங்களை நம்பி பின்பற்ற வேண்டும்; பேட்டரிகளை முறையாக பராமரிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ தகவல்கள் பெற வானொலி, தொலைக்காட்சிகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

தயார் நிலையில் அவசர உதவி பெட்டகம்
மேலும் கயிறு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், தீப்பெட்டி, பேட்டரி, உலர் உணவு வகைகள், குடிநீர், மருந்து பொருட்கள், குளுகோஸ் ஆகியவை கொண்ட அவசர உதவி பெட்டகத்தை எப்போதும் தயார் நிலையில் வைத்திருங்கள். புயல் மற்றும் பேரிடர் காலத்தில் உதவியாக இருக்கும்.

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; படகுகளை போதுமான இடைவெளியுடன் பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்க வேண்டும்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications