Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விற்பனை பத்திரம்.. பிரம்மாஸ்திரத்தை கையிலெடுத்த தமிழக அரசு.. அதுவும் அடுக்குமாடி குடியிருப்பா? அருமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவானது, தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வரும்நிலையில், அடுத்த அதிரடியை தமிழக அரசு செயல்படுத்த போகிறது.. என்ன அது?

தமிழக அரசின் சார்பில் ஒரு வருடம் முழுவதும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது... இதற்கென தனி இலட்சினையும் முதல்வர் ஸ்டாலின் அன்று வெளியிட்டிருந்தார்.

Sale Deed and Tamil Nadu Government provides housing for 100 transgenders, say Sources

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பலகோடி ரூபாய் மதிப்புகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.. மாவட்டந்தோறும் இதற்காகவே விழாக்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அதேபோல, ஒவ்வொரு பகுதியிலும் மருத்துவ முகாம்கள் நடக்கின்றன.. இதனால், ஏராளமான பொதுமக்கள் பலன் பெற்று கொண்டிருக்கிறார்கள்.

உரிமைத்தொகை: இதில் மகளிருக்கான சிறப்புத்திட்டங்களும் பல அறிவிக்கப்பட்டுள்ளன.. குறிப்பாக, பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண் சமுதாய வளர்ச்சிக்காகவும், தமிழக அரசு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், கலைஞர் உரிமைத்தொகைக்கான வேலைகள் தற்சமயம் மும்முரமாகி கொண்டிருக்கும் நிலையில், கூட்டுறவுத்துறை சார்பாகவும் பெண்களுக்கு நிதியுதவி வழங்க முடிவாகி உள்ளது.

ஆம்.. பெண்களுக்கு சுய தொழில் செய்வதற்காக, குறைந்த வட்டியில் மீண்டும் கடன் வழங்கப்படுகிறது... மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இந்த கடன் வழங்கப்பட உள்ளது. இந்த கடன் வசதியை பெற வேண்டுமானால், ஒரு குழுவில், 10 முதல், 20 பேர் வரை உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.. ஒரு குழுவுக்கு அதிகபட்சம், 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

கருணாநிதி நூற்றாண்டு விழா: கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு பிரிவின் கீழ், 100 சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குமாறு, கூட்டுறவு வங்கிகளுக்கு, தமிழக அரசு அதிரடியாக இப்போது உத்தரவிட்டிருக்கிறது.. இது தவிர, முதல் தலைமுறையை சேர்ந்த, 100 தொழில் முனைவோருக்கு கடன் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இன்னொரு முக்கிய நடவடிக்கையையும் தமிழக அரசு அமல்படுத்த போகிறதாம்.. கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், 100 பேருக்கு வீடுகள் வழங்க, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாம்.. அடுத்த மாதத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக தெரிகிறது.

தமிழக அரசு: இதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் நகர்ப்புற வாழ்விட வாரியத்தை வாரியத்தை தமிழக அரசு அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்ல, இதேபோன்று, 100 திட்ட பகுதிகளை புதுப்பிப்பது, 100 அடுக்குமாடி குடியிருப்புகளை தேர்வு செய்து, அங்குள்ள அனைத்து ஒதுக்கீட்டாளருக்கும் விற்பனை பத்திரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று உறுதியுடன் சொல்கிறார்கள் வாரிய அதிகாரிகள்.

விற்பனை பத்திரம்: விற்பனை பத்திரம் என்பது, ஒரு சொத்தினை விற்பனை செய்பவர், அதன் உரிமையை வாங்குபவருக்கு மாற்றிக் கொடுக்கும் முக்கியமான சட்ட ஆவணமாகும்... இதன்மூலம் வாங்குபவர் அந்த சொத்தின் முழு உரிமையை பெறுகிறார்.. அந்தவகையில், 100 பேருக்கு வீடுகள் வழங்க உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளதால், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் என பெருத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+