கோர்ட்டில் கேஸ் இருந்தாலும் சொத்து விற்பனையை பதிவு செய்யலாம்! பத்திரப்பதிவு துறையால் அதிர்ச்சி
சென்னை: நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் சொத்து விற்பனையை பதிவு செய்யலாம் என பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதை விற்பதற்கு என வரும் பத்திரங்களை சார் பதிவாளர்கள் பதிவு செய்ய மறுத்து திருப்பி அனுப்புவது வழக்கம். இதில் நீதிமன்றம் எந்த வித உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில் சொத்து விற்பனையை நிறுத்தவே கூடாது என சில வழக்குகளில் தீர்ப்புகள் வந்துள்ளன.

எனவே தடை ஆணை இல்லாத நிலையில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் சொத்து விற்பனையை பதிவு செய்யலாம் என பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. பத்திரங்களை திருப்பி அனுப்புவதால் ஏற்படும் வருமான இழப்பை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனினும் பதிவுத் துறையின் இந்த உத்தரவு சொத்து வாங்குவோர் , அதற்கு கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சொத்து வாங்கும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பொதுமக்களுக்கு இந்த உத்தரவால் நிச்சயம் பாதிப்பு ஏற்படும்.
தற்போதைக்கு ஒரு குறிப்பிட்ட சொத்தின் மீது ஸ்டே உத்தரவு பிறப்பிக்காவிட்டாலும் வருங்காலத்தில் பிறப்பிக்க வாய்ப்புள்ளன. அப்படியிருக்கும் போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சொத்துகளை விற்பனை செய்யும் போது அதை வாங்குவோருக்கு அந்த சொத்து பிரச்சினையை கொடுக்கும். அவருக்கே ஏதாவது ஒரு கஷ்டம் வந்துவிட்டால் விற்க முடியாமல் போகும்.
இன்னொரு விஷயம், உரிமையாளருக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்த சொத்தை ஒருவர் வேறு நபருக்கு விற்கும் நிலையில் உரிமையாளர் வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில் மோசடி செய்தவர் அந்த சொத்தை எளிதாக வேறு ஒரு ஏமாளியின் தலையில் கட்டி விட முடியும்.
வீட்டுக் கடன் கொடுத்த வங்கிகளுக்கும் இது ஒரு பிரச்சினையாகும். எனவே இந்த உத்தரவை பத்திரப்பதிவு சட்ட வல்லுனர்களை கொண்டு ஆலோசனை செய்ய வேண்டும் என்பதே ரியல் எஸ்டேட் நிபுணர்களின் கருத்தாகும். வீடு விற்பனைக்கான பத்திரப்பதிவின்போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டடங்களுக்கான, புதிய வழிகாட்டி மதிப்புகள் அமலுக்கு வந்துள்ளன.
பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில், தரைதளத்தில், 10.7 சதுர அடிக்கு, 11,515 ரூபாய்; முதல் தளம், 10,535 ரூபாய், இரண்டாம் தளம், 10,695 ரூபாய், 3வது தளம், 10,870 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், 10.7 சதுர அடிக்கு தரை தளத்தில், 12,667 ரூபாய்; முதல் தளம், 11,589 ரூபாய்; இரண்டாம் தளம், 11,765 ரூபாய்; 3வது தளம், 11,957 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சொத்து வாரிசு பிறந்த நொடியே கிடைக்குமா? பரம்பரை சொத்துரிமையை தந்தை தடுக்க முடியுமா? அதிரடி சட்ட நிஜம் -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications