கியா கியா.. ஐயோ வயிறு வலிக்குதே.. செமையாக டபாய்க்கும் ரயில் பெட்டி ஓட்டை கொள்ளையர்கள்!
புரியாத பாஷையில் பேசி விசாரணையை ரயில் கொள்ளையர்கள் சொதப்பி வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: "ஐயோ... வயித்த வலிக்குதேன்னு..." சொல்லி வயிறை இறுக்கமா பிடிச்சு உட்கார்ந்து கொள்கிறார்களாம் சேலம் கொள்ளையர்கள். திடீர் திடீரென புரியாத பாஷையில் பேசி போலீஸை திசை திருப்புகிறார்களாம்! அதனால் அவர்களிடம் விஷயத்தை வாங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
சென்னை வந்த ரயிலில் ஓட்டையை போட்டு ரூ.5.78 கோடியை பக்காவாக பிளான் பண்ணி கொள்ளை அடித்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த கொள்ளையில் இஸ்ரோ, மற்றும் நாசா உதவி கொண்டு 2 வருஷம் கழித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 7 பேரை பிடித்தனர்.
முதல் முறையாக.. 18 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் "சின்னம்மா"வைச் சந்தித்தார் தினகரன்!
5 பேரிடம் விசாரணை
இவர்களில் ஏற்கனவே 2 பேர சென்னை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் வடமாநிலங்களில் இருந்த மீதமிருந்த 5 பேரை 14 நாளில் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கைதானவர்களுக்கு இந்தி, மராத்தி மொழி மட்டும் தெரிவதால் அந்த மொழிகள் தெரிந்த அதிகாரிகள்தான் விசாரித்து வருகிறார்கள்.
வாய் திறக்கவே இல்லை
ரயில் பெட்டி எந்த இடத்தில் வெட்டப்பட்டது? இவ்வளவு பணம் இந்த ரயிலில்தான் வருகிறது என்று உங்களுக்கு யார் தகவல் சொன்னது? இவ்வளவு பெரிய ரயிலில் எந்த ஆயுதத்தை வைத்து ஓட்டை போட்டீர்கள்? என்று கேள்விமேல் கேள்வி கேட்டனர். விசாரணை ஆரம்பித்த 4 நாள் ஆனபோது, இதைபற்றி சொன்ன போலீசார், கொள்ளையர்களில் யாருமே வாய் திறந்து எதையுமே சொல்லவில்லை, விரைவில் உண்மையை வரவழைத்து விடுவோம் என்றனர்.
4 நாள்தான் பாக்கி
தற்போது 10 நாள் ஆகிவிட்டது. இப்போதும் அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல்தான் இருக்கிறார்கள். 4 நாட்களுக்கு முன்பு இதில் ஒருவர் மயக்கமடைந்து விழுந்து விட்டார். அவரை தூக்கி கொண்டு ஓடிப்போன போலீசார், பிறகு சிகிச்சை அளித்து கொண்டு வந்தனர். சோர்வு அதிகமானதால் அவர் மயக்கமாகிவிட்டார் என ஆஸ்பத்திரியில் சொல்லப்பட்டது.
வயிறு வலிக்குதே
இப்போது 2 நாளைக்கு முன்பு பில்தியா என்ற கொள்ளையன், திடீரென வயிற்றை பிடித்துகொண்டு, வயிறு வலிக்கிறதே என்று கதறி துடிக்க நடிக்க ஆரம்பித்து விட்டாராம். இதனால் பதறி போன போலீசார் பில்தியாவை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரி ஓடினார்கள். ஸ்கேன் உள்ளிட்ட எல்லா டெஸ்ட்டும் எடுத்து பார்த்தார்கள். கடைசியில் அது "நடிப்பு" என ரிப்போர்ட் வந்தது. இதில் ரொம்பவே கடுப்பாகி விட்டார்கள் போலீசார்கள்.
அலார்ட்-ஆக இருக்கிறார்கள்
இந்த 5 பேருக்குமே ஹிந்தி நல்லா தெரிந்தாலும் திடீரென பார்சி மொழியில் பேசுகிறார்களாம். இப்படி புரியாத மொழில் திடீர் திடீரென பேசி போலீசாரை திணறடித்து வருகிறார்களாம். போலீசாரிடம் மட்டுமில்லாமல் தங்களுக்குள்ளும் உஷாராக பார்சி மொழியில்தான் பேசி, ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்காமல் அலார்ட்டாக இருக்கிறார்களாம்.
கல்லூளிமங்கன்கள்
ஏற்கனவே 10 நாள் போயாச்சு. இன்னும் 4 நாள்தான் இருக்கு. ஒரு பதிலும் இதுவரை வாங்க முடியவில்லை. அந்த பெட்டியிலதான் இவ்வளவு பணம் வருதுன்னு உங்களுக்கு சொன்னது யாரு-ன்னு மட்டும் தெரிஞ்சா கூட போதுமாம். அந்த பதிலை வைத்து மீதியை பிடித்து விடலாம் என்று போலீசார் கணக்கு போட்டால், கொள்ளையர்கள் அதற்கு மேல் கல்லூளிமங்கன்களாக இருக்கிறார்களாம்.
உங்களுக்கு எப்படி தெரியும்?
எனவே சிபிசிஐடி போலீசார் குழம்பியும், திணறியும்,உள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த 4 நாட்களுக்குள் உண்மையை வரவழைத்து விடுவார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். "அந்த பெட்டியில பணம் இருக்குன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?"... இந்த கேள்விதான் இன்னும் தொடர்கிறது.