நகரங்களிலும் நாளை முதல் சலூன்களை திறக்கலாம்.. சென்னையில் தடை தொடரும்- அரசு அனுமதி
நகரங்களிலும் நாளை முதல் சலூன்களை திறக்கலாம்.. சென்னையில் தடை தொடரும்- அரசு அனுமதி
சென்னை: நகரப் பகுதிகளிலும் நாளை முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்களைத் திறக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக சலூன் கடைகள் உள்பட கடைகள் திறக்கப்படாமலேயே இருந்தன. 4ஆவது கட்டமாக இந்த மாதம் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் கடைகளைத் திறப்பது, தொழிற்சாலைகளை இயக்க அனுமதிப்பது, உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

கடை திறப்பு
எனினும் சலூன் கடை மூலம் கொரோனா தொற்று வேகமாக பரவியதால் மற்ற கடைகளைத் திறக்க தளர்வு வழங்கப்பட்ட போதிலும் சலூன் கடைகள், பியூட்டி பார்லர், ஸ்பா உள்ளிட்ட கடைகளை திறக்க அரசு அனுமதி மறுத்தது. இந்த நிலையில் அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதலில் கிராமப்புறங்களில் உள்ள சலூன் கடைகளை திறக்க கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அரசு அனுமதி அளித்தது.

சலூன் கடைகள்
இந்த நிலையில் நாளை முதல் நகர்ப்புற பகுதிகளிலும் சலூன் கடைகளை திறக்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் நகர் பகுதிகளிலும் நாளை முதல் சலூன் கடைகளை திறக்கலாம். சலூன் கடைகள், அழகு நிலையங்களை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கலாம்.

தொழிலாளர்கள்
குளிர்சாதன வசதியை சலூன்களும் அழகு நிலையங்களும் பயன்படுத்தக் கூடாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமிநாசினி அவ்வப்போது தெளிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது.

நிபந்தனைகள்
காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் சலூன் கடை உரிமையாளர்களும், அழகு நிலைய உரிமையாளர்களும் தமிழக அரசுக்கு நன்றி கூறியுள்ளனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications