மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை.. இரவோடு இரவாக வந்த செய்தி! சாம்சங் ஊழியர்களில் ஒரு பிரிவினர் உடன்பாடு!
சென்னை: சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினருடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சிறப்பு ஊக்கத்தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்கவும், ஊதிய உயர்வு கொடுக்கவும் சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அதேசமயம், சி.ஐ.டி.யு தரப்பு, நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 25 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடர்ந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு தலையிட்டது.

அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை: நேற்று இரவு தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டிஆர்பி ராஜா, சி.வெ.கணேசன் ஆகியோர் அடங்கிய குழு மற்றும் சாம்சங் நிறுவனத்தின் பிரதிநிதிகள், போராட்டக் குழுவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ஊழியர்களில் ஒரு தரப்புக்கும், சாம்சங் நிர்வாகத்தினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
சிறப்பு ஊக்கத்தொகை வழங்க சாம்சங் ஒப்புதல்: அதன்படி, சாம்சங் நிறுவனம், பணியாளர் குழுவுடன் கலந்தாலோசித்து, ஊதியத்தினை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்தும். ஒரு இடைக்கால சிறப்பு ஊக்கத்தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்கப்படும். இது அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை நடைமுறையில் இருக்கும். இந்த சிறப்பு ஊக்கத்தொகை 2025-26 நிதியாண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வுடன் சேர்த்து கணக்கிடப்படும்.
ஏ.சி பேருந்துகள்: தற்போது உள்ள 5 வழித்தடங்களில் இருந்து ஏ.சி பேருந்துகளின் இயக்கம் அடுத்த ஆண்டுக்குள் 108 வழித்தடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். தொழிலாளர்களின் குடும்ப நிகழ்ச்சிகள் வருடத்திற்கு 4 எண்ணிக்கையிலிருந்து 6ஆக உயர்த்தப்படும். ஒவ்வொரு நிகழ்விலும் பங்கேற்கும் குடும்பத்திற்கு சுமார் 2,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்கப்படும், பணியில் இருக்கும் தொழிலாளர் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்தினரின் உடனடித் தேவைக்காக, ரூபாய் ஒரு லட்சம் கூடுதல் உதவித் தொகையாக வழங்கப்படும். தொழிலாளரின் குழந்தை பிறப்பிற்கு ரூ.2000 பரிசாக வழங்கப்படும்.
உடன்பாடு எட்டப்படவில்லை.. சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கிறது: சிஐடியூ
உணவுப் படி உயர்த்தப்படும்: தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களின் ஓய்வறைகள் மேம்படுத்தப்படும். தொழிற்சாலை கட்டிடங்களுக்கு இடையில் செல்லும் பாதைக்கு கூரை அமைத்துத் தரப்படும். கம்பரஸர் கட்டிடத்தில் ஒரு புதிய மருத்துவ அறை நிறுவப்படும். நிறுவனத்தின் கேண்டீனில் வழங்கப்படும் உணவு வகைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், உணவுப்படி உயர்த்தி வழங்கப்படும் ஆகிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. ஊழியர்களின் ஒரு தரப்பினர் மற்றும் சாம்சங் நிறுவனம் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
சி.ஐ.டி.யு உடன்படவில்லை: அதேசமயம், சாம்சங் இந்தியா சிஐடியூ தலைவர் முத்துக்குமார் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது என்றும் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆக, சாம்சங் ஊழியர்களில் ஒரு தரப்பினர், சுமுக உடன்பாடுக்கு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சிஐடியு, போராட்டத்தை தொடர்ந்து வருகிறது.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications