துண்டு துண்டாக வெட்டப்பட்டது சந்தியாவின் உடல் பாகங்களா.. தடவியல் நிபுணர்கள் சோதனை
சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சந்தியா உடல் பாகங்கள் குறித்த சோதனை நடத்தப்பட்டது.
சென்னை: குப்பையில் துண்டு துண்டாக வீசப்பட்ட உடல்பாகங்கள் அனைத்தும் சந்தியாவுடையது தானா என்பது குறித்த சோதனை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது.
சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த 21-ம் தேதி, 2 கால்கள் மற்றும் ஒரு கை கண்டெடுக்கப்பட்டது. மிக சவாலான இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்ட பள்ளிக்கரணை போலீசார், இறந்த பெண் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என்றும், கணவராலேயே அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்றும் கண்டுபிடித்தனர்.
15 நாட்களில் குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்து சிறையிலும் அடைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவியின் தவறான ஒழுக்கம் காரணமாகவே கொன்றதாகவும், உடற்பாகங்களை ஜாபர்கான் பேட்டை அடையாற்றில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

6-வது நாள்
இதில் சந்தியாவின் தலை மற்றும், மற்றொரு கை உட்பட சில பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் நேற்று பெருங்குடி குப்பைக்கிடங்கில் 25 அடி ஆழம் வரை தோண்ட முடிவு செய்து, 15 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டினர். 6-வது நாளான இன்றும் அந்த பணி மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது.

மரபணு சோதனை
இதனிடையே இப்போது கிடைக்கப்பட்ட உடல்பாகங்கள் எல்லாம் சந்தியாவுடையதுதானா என்று தடவியல் துறையினரால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சந்தியாவின் கை, கால்களின் திசுக்கள் எடுக்கப்பட்டு தடவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், சந்தியாவின் இடுப்பு பகுதியின் திசுக்களும் எடுக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மரபணு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும்
அங்கு தடயவியல் துறையினர் இன்று 2-ம் கட்ட சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். உடலில் உள்ள திசுக்களை எடுத்து அது சந்தியாவினுடையதுதானா என்று பார்க்கப்படும். கடைசியாக இந்த சோதனையின் முடிவுகள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும்.

அரசுக்கு கோரிக்கை
இந்நிலையில் சந்தியாவின் தந்தை ராமசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொல்லும்போது, "என் மகளின் உடல் பாகங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. சந்தியாவின் கொலையில் உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி












Click it and Unblock the Notifications