சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. சாலையில் அமர்ந்து தர்ணா! கைது செய்த போலீசார்
சென்னை: சென்னை பாரிமுனை சாலையில் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள உயர்வு, பணி நிரந்தரம், தனியார்மயமாக்கலை கண்டித்து இன்று காலை 10 மணி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 500-க்கு மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பள உயர்வு, பணி நிரந்தரம், தனியார்மயமாக்கலை கண்டித்து தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 1 ஆம் தேதி முதல் போராட்டம் செய்து வருகிறார்கள். முதலில் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தை தொடங்கினர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதாலும் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வேண்டுமானால் அம்பத்தூர் மண்டலத்தில் நீங்கள் போராட்டத்தை தொடரலாம் என்றும் கோர்ட் தெரிவித்து இருந்தது. இதையடுத்து ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தியவர்களை இரவோடு, இரவாக கைது செய்து போலீசார் அப்புறப்படுத்தினர்.
எனினும் முழுவதுமாக கோரிக்கையை நிறைவேற்ற கோரி தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 148-வது நாளான இன்று சென்னை குறளகம் சந்திப்பில் இருந்து தலைமை செயலகம் வரை பேரணியாக சென்று முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுக்க திட்டமிட்டு இருந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரியவந்தது.
இதையடுத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலையிலேயே பாதுகாப்பு பணிக்காக குவிந்தனர். இதையடுத்து காலை 10 மணியளவில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் குறளகம் சந்திப்பில் இருந்து தலைமை செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர். 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டு தூய்மை பணியாளர்களை கைது செய்தனர்.
திருவிக நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். போலீசார் கைது செய்வதை அறிந்து தூய்மை பணியாளர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பாரிமுனை என்.ஒ.சி சாலையில் அமர்ந்து நூற்றுக்கணக்கானோர் தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அவர்களையும் போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்று வருகிறார்கள். சமுதாய கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications