Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“நீ சிங்கம்தான்”.. விஜய்க்கு ஆதரவாக அவரது நண்பர் சஞ்சீவ் போட்ட பதிவு.. கொந்தளித்த நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்க்கு ஆதரவாக அவரது நண்பரும், நடிகருமான சஞ்சீவ் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம் தான்" எனப் பதிவிட்டுள்ளார் நடிகர் சஞ்சீவ்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த சனிக்கிழமை செப். 27 ஆம் தேதி அன்று கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Sanjeev Backs Vijay Amid Controversy You Are a Lion When Many Elephants Attack

நாமக்கல் நிகழ்வை முடித்து கொண்டு இரவு 7 மணி அளவில் கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு விஜய் வந்தார். விஜயை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலர் மயங்கிய நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒன்பது குழந்தைகள் உள்பட 39 பேர் நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒருவர், இன்று ஒருவர் என மேலும் இருவர் உயிரிழந்தனர். இதன் மூலம் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்தது. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கரூர் பிரச்சாரம் முடிந்ததும், திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை திரும்பிய நடிகரும், தவெக தலைவருமான விஜய், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றார். பின்னர் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்தார்.

மேலும், தவெக சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் விஜய் தெரிவித்தார். மேலும் கரூருக்கு நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல அனுமதி கேட்டிருக்கிறார் விஜய்.

போலீஸ் பாதுகாப்பு அனுமதி தர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மேலும் கூட்ட நெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியுள்ளது தவெக. கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தொண்டர்களும் மக்களும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் அறிந்தும், திருச்சியில் இருந்து கரூருக்கு திரும்பாமல், சென்னை வந்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. கடந்த 36 மணிநேரமாக நீலாங்கரை வீட்டிலேயே தங்கியிருந்த விஜய், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களை மட்டும் சந்தித்தார்.

இந்த சூழலில் சிலர் சமூக வலைதளங்களில் 'ஐ ஸ்டான்ட் வித் விஜய்' என்றும் விஜய்க்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் நண்பரும், நடிகருமான சஞ்சீவ் தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய்யின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம் தான்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பதிவுக்கு பலரும் கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+