பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த 2024ல் சமத்துவ மக்கள் கட்சி என்கிற, தன்னுடைய கட்சியை பாஜகவுடன் இணைத்திருந்தார் சரத்குமார். ஆனால், இதுவரை பாஜகவில் அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பாஜக உடன் கூட்டணியில் இணைந்தாலும், இதுவரை எனக்கோ, எனது ஆதரவாளர்களுக்கோ இதுவரை எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை என்று சரத்குமார் ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய ஆதரவாளர்கள் பலரும், தனக்கு பதவி வழங்கப்படவில்லை என்பதை ஆதங்கத்துடன் தெரியப்படுத்திருக்கிறார்கள் என சரத்குமார் கூறியிருக்கிறார். மட்டுமல்லாது சமீபத்தில் திருச்சியில் நடந்த என்டிஏ பொதுக்கூட்டத்தில் தன்னுடைய புகைப்படம் இடம் பெறாதது குறித்தும் சரத்குமார் குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications