ஒரு நாள் கூட ஜெயிலுக்குள் இருக்க மாட்டேங்குறாரே ராஜகோபால்?!
சரவணபவன் ஓனர் ராஜகோபாலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது
Recommended Video
சென்னை: ஒருநாள் கூட உள்ளே இருக்க முடியாதா என்று ராஜகோபாலை சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்டது ஏன் என்று இப்போதுதான் புரிகிறது. இன்னும் ஒருநாள் கூட முழுசா அண்ணாச்சி ஜெயிலுக்குள்ளே இல்லை!
கல்யாணமான ஜீவஜோதியை தன்வசப்படுத்த சரவணபவன் ஓட்டல் ஓனர் அன்று பலத்த முயற்சியில் இறங்கினார். இதற்காக அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொடைக்கானல் மலை உச்சியில் இருந்து தள்ளிவிட செய்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக ராஜகோபால் உள்ளிட்ட 6 பேருக்கு சென்னை ஹைகோர்ட் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் ராஜகோபால் உள்ளிட்ட 4 பேரின் ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதிசெய்தது.
கடந்த 7ம் தேதிக்குள் சென்னை ஐகோர்ட்டில் சரணடைந்து ஜெயிலுக்கு செல்ல கெடு விதிக்கப்பட்டது. ஆனால், ராஜகோபால் உடம்பு சரியில்லை என்று ஆஸ்பத்திரியில் போய் படுத்து கொண்டார். மேலும் சரணடைய டைம் வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவும், வெகுண்டுபோன சுப்ரீம்கோர்ட், அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், ஒருநாள் கூட சிறையில் இருக்க முடியாதா என்று நறுக்கென கேள்வி கேட்டு, ஹைகோர்ட்டில் சரணடையும்படி உத்தரவிட்டது.

இதனால் வேறு வழியின்றி ஆம்புலன்சில் படுத்த படுக்கையாக சென்று சரணடைந்த ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் அண்ணாச்சியோ, கோர்ட் வளாகத்திலேயே நெஞ்சுவலி என்று சொன்னார். அதனால் நேற்று முன் தினம் இரவு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிறைக்கைதிக்கான 4வது வார்டில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர பரிசோதனை நடந்து வருகிறது.
அண்ணாச்சி முழுசாக குணமடைந்ததாக டாக்டர்கள் சான்றிதழ் கொடுத்த பின்னரே புழல் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது. உண்மையிலேயே அண்ணாச்சிக்கு உடம்பு சரியில்லையா? எப்போது குணமடைவார்? எப்போது ஜெயிலுக்கு செல்வார் என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications