தீபாவளிக்கு ரிலீஸாகிறது 'சர்கார்'... வழக்கு வாபஸால் நீங்கியது தடை!
Recommended Video

சென்னை : நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருந்த தடை நீங்கியுள்ளது. சர்கார் படத்தின் கதை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவி இயக்குனர் சர்கார் படத்திற்கு தடை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ராஜேந்திரன் வழக்கை வாபஸ் பெற்றதையடுத்து படம் வெளியிட இருந்த தடை நீங்கியுள்ளது.
நடிகர் விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புடன் 'சர்கார்' திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. 'சர்கார்' படம் குறித்த செய்திகளில் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பும் கூடவே பரபரப்பான தகவல்களும் சுற்றிவருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டரால் சர்ச்சையானது.

இதனையடுத்து பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் நாசுக்காக பேசிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. நான் அரசியலுக்கு வந்து முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் முதலமைச்சராக நடிக்கமாட்டேன் என்று அவர் கூறியது அரசியல்வாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது கதையைத் திருடி 'சர்கார்' படத்துக்கு பயன்படுத்தியதாக வருண் என்கிற ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய செங்கோல் படத்தின் கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துவைத்திருந்ததாகவும், அந்தக் கதையை திருடி முருகதாஸ் சர்கார் என படம் இயக்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சுந்தர் முன்பு இன்று வந்தது. தீபாவளிக்கு படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்படுமோ என்பதால் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உயர்நீதிமன்றம் வந்திருந்தனர். இதனிடையே ராஜேந்திரன் தன்னுடைய வழக்கை வாபஸ் பெற்றதையடுத்து சர்கார் படத்தை தீபாவளிக்கு வெளியிட இருந்த தடை நீங்கியுள்ளது. ராஜேந்திரனிடம் சர்கார் படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனம் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை அடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் கதை வருண் ராஜேந்திரனுடையது தான் என்பதை ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புகொண்டுள்ளார். வருண் ராஜேந்திரன் கேட்டது போல திரைப்படத்தில் அவருடைய பெயரை போட்டு நன்றி என போடவும், நஷ்ட ஈடு தொகையாக கேட்ட ரூ. 30 லட்சத்தில் கணிசமதான தொகையை தர ஒப்புகொண்டதையடுத்து வழக்கை ராஜேந்திரன் வாபஸ் பெற்றுள்ளார்.
-
வதந்திகளை நம்பாதீங்க.. மதசார்பில் உறுதி! இப்தார் விழாவில் பாஜக கூட்டணிக்கு ரெட் சிக்னல் போட்ட விஜய் -
காலை முதல் நோன்பு கடைபிடித்த விஜய்.. குல்லா அணிந்து இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்பு! -
விஜய், திரிஷா பிரச்சனையில் குஷ்பு உடைத்த ரகசியம்.. எனக்கு நல்லாவே தெரியும்.. ஓபனாக சொன்ன வார்த்தை! -
கடிவாளம் போடாமல் ஆடவிட்ட விஜய்.. ரஜினிகாந்த் வைத்த ஆப்பு.. சிக்கலில் கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா! -
விஜய் பாடல்களுக்கு தடை.. பள்ளி ஆண்டு விழாவில் பயன்படுத்த கட்டுப்பாடு.. காரணம் இதுதான் -
வரும் தேர்தலில் விஜய்யால் போட்டியிட முடியாதா? மனைவி சங்கீதா வைக்கும் செக்? லிஸ்ட்லயே இல்லாத ட்விஸ்ட் -
100ஆ ஹலோ கண்ட்ரோல் ரூமா? விஜய்யின் தவெகவை பாருங்க சார்.. நள்ளிரவில் தனலட்சுமியால் அலறிய கோவை போலீஸ் -
நடத்தை விதி வந்தால்.. வெளியே வருவாருன்னு சொன்னீங்களே.. வீட்டுக்குள் விஜய்... விழிபிதுங்கும் தம்பிகள் -
Election Exclusive: விஜய் தனியா நிக்குறாரு..ஏன்? ஏன்னா யாருமே வரலை! பனையூரைச் சுற்றி மர்ம சுவர்! தலைகளின் தகிடு தத்தோம்! -
சட்டம் அதன் கடமையை செய்யும்.. விஜய் பிஜேபி கூட போகவே மாட்டாரு.. ஏனென்றால்? விடாமல் அடிக்கும் ஜூலி -
சிம்பு விஜய்யை காலி பண்ணி இருப்பாரு.. ரஜினி ஒரு வார்த்தை சொன்னால் வேற மாதிரி ஆகிடும்..! பிரபலம் ஆதங்கம் -
"விசில்" நம் தேசிய கீதம்.. மேடையில் ஓப்பனாக பேசிய ஓ.பன்னீர்செல்வம்












Click it and Unblock the Notifications