ஒரு மாற்றமும் இல்லை.. வைரலான சர்கார் டைட்டில் கார்டு!
Recommended Video
சென்னை: சர்கார் படத்தின் கதை யாருக்கு என்ற பஞ்சாயத்து ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில் அப்படத்தின் டைட்டில் கார்டில் கதை ஏ.ஆர். முருகதாஸ் என்றே இடம் பெறுகிறது.
இதுதொடர்பான புகைப்படத்தையும் ஏ.ஆர். முருகதாஸே தனது டிவிட்டரில் போட்டுள்ளார். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவரின் செங்கோல் கதையும், ஏ.ஆர். முருகதாஸின் சர்கார் கதையும் ஒன்று என்று சர்ச்சை கிளம்பியது. இதுதொடர்பாக வருண் வழக்கும் தொடர்ந்தார். இதையடுத்து சமரசம் பேசப்பட்டது. அதில் உடன்பாடும் எட்டப்பட்டது.
[போராடி வெற்றி.. விஜய்க்கு கூட ஒருவகையில் நெருக்கம்தான்.. யார் இந்த வருண் ராஜேந்திரன்!]
இந்த நிலையில் படத்தின் கதை யாருடையது என்பதை படத்தின் டைட்டில் கார்டிலேயே ஏ.ஆர். முருகதாஸ் விளக்கியுள்ளார். இதுதொடர்பான டைட்டில் கார்டையும் அவர் டிவிட்டரில் போட்டுள்ளார். அதில் கதை, திரைக்கதை, இயக்கம் ஏ.ஆர். முருகதாஸ் என்று இடம் பெற்றுள்ளது.
— A.R.Murugadoss (@ARMurugadoss) October 30, 2018
இதன் மூலம் படத்தின் கதை தன்னுடையது என்று வலியுறுத்தியுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். இந்த புகைப்படத்தை தற்போது விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.