எம்ஜிஆர் மறைவு.. ஜெ.வுக்கு 2 நாட்களாக பச்ச தண்ணீர் கூட பல்லில் படலை.. சசிகலா சொன்ன வெளிவராத தகவல்
சென்னை: எம்ஜிஆர் மறைவின்போது ஜெயலலிதா 2 நாட்களாக பச்சை தண்ணீரை கூட அருந்தவில்லை என சசிகலா ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தந்தி டிவிக்கு சசிகலா அளித்த நேர்காணலில் கூறுகையில் எம்ஜிஆர் மறைவை அப்போதைய அமைச்சர்களோ நிர்வாகிகளோ ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கவே இல்லை. எனக்கு பிடிஐயிலிருந்து ஒரு நண்பர் போன் போட்டு இந்த விஷயத்தை தெரிவித்தார்.
இதையடுத்து நானும் ஜெயலலிதாவும் தினகரனும் ராமாவரம் தோட்டத்திற்கு சென்றோம். அப்போது எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நெருங்கவிடவில்லை
இதையடுத்து சில காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் உள்ளே சென்றோம். அப்போதும் ஜெயலலிதாவை எம்ஜிஆர் உடல் அருகே நெருங்கவேவிடவில்லை. இதையடுத்து பல்வேறு அவமானங்களுக்கு மத்தியில் நாங்கள் ராஜாஜி அரங்கில் அவரது உடல் அருகே போய் நின்றோம்.

ஜெயலலிதா
ஆனால் எங்களை சிலர் துன்புறுத்தினர். என்னை ஊசியால் குத்தினர். ஆனால் நான் இதை ஜெயலலிதாவிடம் சொல்லாமல் அவர் எம்ஜிஆரின் உடலை பார்க்க வேண்டும் என்பதால் பொறுத்துக் கொண்டேன். இரு தினங்களாக ஜெயலலிதா எதையும் சாப்பிடவில்லை.

அதிர்ச்சி
அவரது உடல் அருகே நின்றிருந்த போது கூட எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் அதிர்ச்சியிலேயே சோகமாக நின்றிருந்தார். தண்ணீர் அருந்துமாறு கூறியும் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து நாங்கள் போயஸ் தோட்டத்திற்கு திரும்பினோம்.

புகைப்படம்
அங்கு ஜெயலலிதாவின் அம்மாவின் பெரிய புகைப்படம் இருக்கும். அந்த புகைப்படத்திற்கு முன் நின்று கொண்டு அழுதார். பின்னர் கீழே விழுந்து புரண்டார். அதில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது, பின்னர் தண்ணீர் தெளித்து அவரை ஆசுவாசப்படுத்தினேன் என்றார் சசிகலா.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications