ஆரம்பிச்சாச்சு... சின்னம்மா வெளியே வந்தாச்சு.. சந்திக்க டைம் கேட்டு லைனில் நிற்கும் "பெருந்தலைகள்"!
சசிகலாவை சந்திக்க சிலர் முயன்று வருகிறார்களாம்
சென்னை: அணி மாறும் வேலை ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.. காரணம், ஒருசில தமிழக அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க திட்டமிட்டு வருகிறார்களாம்.. இது எடப்பாடியாருக்கு கலக்கத்தை தந்து வருவதாக தெரிகிறது!
சசிகலா இன்னும் சென்னைக்கு வராத நிலையில், அவரை பற்றின தகவல்கள் தினந்தோறும் பரபரப்பையும் தமிழக அரசியலில் ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.
அதிமுகவில் உள்ள ஒருசிலர் சசிகலாவுக்கு நேரடியாகவே ஆதரவை அளித்தனர்.. ஆனால் தொடர்ந்து சசிகலாவை பாராட்டுவதற்கு அதிமுக தலைமை கடிவாளம் போட்டுள்ளதாக தெரிகிறது.

கடிவாளம்
எனினும், ஒருசில அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க திட்டமிட்டு வருகிறார்களாம்.. ஆனால் அவர்கள் யார் என்று உறுதியாக தெரியவில்லை.. ஏற்கனவே சிறையில் உள்ள சசிகலாவ சந்திக்க 2 அமைச்சர்கள் மனு தந்திருந்தனர்.. அவர்களும் யார் என்று தெரியாத நிலையில், மேலும் சிலர் சசிகலாவை சந்திக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நடவடிக்கை
நேற்றுகூட சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்த நபர் மீது கட்சி நடவடிக்கை எடுத்திருந்தது.. இப்படி மேலும் சிலர் கிளம்பினால், அடுத்தடுத்து அதிமுகவில் என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பும், சந்தேகமும் எழுந்து வருகிறது...

ஆதரவாளர்கள்
ஒருவேளை, கசிந்து வரும் இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், தடாலடியாக கிளம்பி சென்று சசிகலாவை சந்திக்க நேர்ந்தால், கட்சி தலைமை இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமா? அல்லது சசிகலாவின் ஆதரவாளர்கள் என்று பகிரங்கமாக அறியப்பட்டவர்கள், தற்போது தலைமைக்கு கட்டுப்பட்டு இருந்தாலும், இன்னும் எவ்வளவு நாளைக்கு தலைமைக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன.

இசட் பிரிவு பாதுகாப்பு
இதற்கிடையே, சசிகலா வரும் நாட்களில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத விஐபியாக போகிறார் என்பதற்கான இன்னொரு அறிகுறியும் தென்படுகிறது. அதாவது அவருக்கு இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துரைச் செயலாளரிடம், சசிகலாவின் வழக்கறிஞர் மனு போட்டுள்ளார். இது கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் மத்திய அரசு நினைத்தால் கொடுக்க உத்தரவிட முடியும் என்பதால் இந்த விவிஐபி பாதுகாப்புடன் சசிகலா வலம் வரப் போகிறாரா என்ற பயங்கர எLிர்பார்ப்பும் நிலவுகிறது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications